News April 10, 2024

IPL: கடைசி வரை போராடிய ஷஷாங்க் சிங்

image

ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக, ஷஷாங்க் சிங் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 6 பவுண்டரி, 1 சிக்சர் விளாசிய அவர், 46*(25) ரன்கள் குவித்து அசத்தினார். ஐபிஎல் ஏலத்தில் தெரியாமல் வாங்கப்பட்ட இவர், அனைத்து போட்டிகளிலும் சிறந்து விளங்குவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Similar News

News July 8, 2025

யஷ் தயாள் மீது பரபரப்பு FIR!

image

RCB வீரர் யஷ் தயாள் மீது உ.பி.யில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. காஜியாபாத்தை சேர்ந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், அவர் மீது இந்த FIR பதியப்பட்டுள்ளது. யஷ் தயாள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முதல்வர் குறை தீர்க்கும் போர்டல் மூலம் இளம் பெண் ஒருவர் அவர் மீது, பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் வைத்துள்ளார்.

News July 8, 2025

சுவாமிக்கு சாற்றும் மாலையை பக்தர்கள் அணியலாமா?

image

கடவுளின் சன்னதிக்குச் சென்ற அனைத்து பொருள்களுமே புனிதம் பெற்றுவிடும். அந்தவகையில், சன்னதியில் குடிகொண்டிருக்கும் தெய்வங்களுக்கு சாற்றப்படும் மாலைகளும் புனிதம் பெறும். அதனை பக்தர்களுக்கு அளிக்கும்போது அவர்களின் கடவுள் நம்பிக்கை மேலும் வலுப்பெறும். தனிநபர் (அ) வாகனங்கள் ஆகியவற்றுக்கு மாலை அணியும்போது, நமக்கான உத்வேகம் அதிகரிக்கும். தொடங்கும் காரியங்களும் நல்ல பலன்களை அளிக்கும்.

News July 8, 2025

பாமகவில் தொடரும் மோதல்.. அதிமுகவுக்கு தாவிய Ex மா.செ.,

image

பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையே நடந்து வரும் மோதலால் அதிருப்தியில் பலர் சமீப காலமாக திமுக, அதிமுகவுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கடலூர் வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் காசி நெடுஞ்செழியன் தலைமையில் 400 பேர் அதிமுகவில் இணைந்தனர். நெய்வேலியில் நடைபெற்ற இந்த இணைப்பு விழா பாமகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நெய்வேலி பாமகவின் வாக்கு வங்கி அதிகம் உள்ள தொகுதியாகும்.

error: Content is protected !!