News April 27, 2025
IPL: RCB அணிக்கு 163 ரன்கள் இலக்கு

புது டெல்லியில் நடைபெற்று வரும் IPL போட்டியில், RCB அணிக்கு DC அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற RCB கேப்டன் பட்டிதார் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து, களமிறங்கிய DC அணி வீரர்கள் நிலைத்து நின்று விளையாடவில்லை. ராகுல் மட்டும் நிதானமாக விளையாடி 41 ரன்கள் எடுத்தார். பின்னர், 20 ஓவர்கள் முடிவில் DC அணி 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது.
Similar News
News April 28, 2025
டிரெஸ்ஸை கழட்டிட்டு உட்கார சொன்னாரு: நடிகை பகீர்

நடிகை நவீனா போலே பாலிவுட் இயக்குநர் சஜித் கான் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 2004-ம் ஆண்டில் நடந்த முதல் சந்திப்பிலேயே டிரெஸ்ஸை கழட்டிவிட்டு தன் முன் உட்கார சொன்னதாகவும், டிரெஸ் இல்லாமல் தனது உடல் எப்படி இருக்கும் என்பதை பார்க்க விரும்புவதாக சஜித் கூறியதாகவும் நடிகை குற்றஞ்சாட்டியுள்ளார். உடனே அந்த அறையை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.
News April 28, 2025
ஏப்ரல் 28: வரலாற்றில் இன்று

*1876 – பிரிட்டன் இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. *1925 – நீதிக்கட்சி நிறுவனர் சர் பிட்டி தியாகராயர் இறந்தநாள். *2000 – இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தொடர் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. *1987 – நடிகை சமந்தா பிறந்தநாள். *உலக தொழிலாளர் நினைவு நாள்.
News April 28, 2025
3 ஆண்டுகள் சிறை.. பாக். குடிமக்களுக்கு எச்சரிக்கை!

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிவதற்குள் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. கடந்த 4-ம் தேதி அமலான குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின்படி, 3 ஆண்டுகள் சிறை அல்லது ₹3 லட்சம் அபராதம் அல்லது இது இரண்டுமே விதிக்கப்படும் என கூறியுள்ளது. மெடிக்கல் விசாவில் இந்தியாவில் இருப்பவர்களுக்கு நாளையே கடைசி நாளாகும்.