News April 11, 2024
IPL: ராஜஸ்தான் அணிக்கு ₹12 லட்சம் அபராதம்

RR-GT இடையேயான ஐபிஎல் போட்டியில், மெதுவாக பந்துவீசியதால் ராஜஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விதிப்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசும் அணி 20 ஓவர்களை வீசியிருக்க வேண்டும். ஆனால், நேற்றை போட்டியில் குறித்த நேரத்திற்குள் பந்துவீச்சை முடிக்காததால், ராஜஸ்தான் அணிக்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக, டெல்லி, குஜராத்துக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
Similar News
News August 11, 2025
பழைய ஓய்வூதிய திட்டம்: கருத்து கேட்கும் TN அரசு

வரும் 18-ம் தேதி முதல் செப்.9-ம் தேதி வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு கருத்து கேட்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், அரசின் இந்த முடிவு அவர்களுக்கு சற்று மகிழ்ச்சியை அளித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
News August 11, 2025
பொது இடங்களில் மது அருந்துவோரை தடுங்க: HC

பொது இடங்களில் மது அருந்துவதைத் தடுக்கும் நோக்கில் விரைவாக ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், மது அருந்திவிட்டு பிரச்னை செய்வோர் தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் மது அருந்துவோரால் பெண்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
News August 11, 2025
ஆண்டில் 300 நாள்கள் தூங்கும் மனிதர்

நல்ல தூக்கத்துக்காக பலர் ஏங்க, ராஜஸ்தானை சேர்ந்த புர்க்காராமுக்கு (46) தூக்கமே சாபமாகிவிட்டது. தன் 23-வது வயது முதல் ‘ஆக்சிஸ் ஹைப்பர்சோம்னியா’ என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்ட இவரால், ஒரு மாதத்தில் 5 நாள்கள் மட்டுமே விழித்திருக்க முடிகிறது. மீதி 25 நாள்கள் தொடர்ச்சியான தூக்கத்தில் கழிகிறது. இவர் தூக்கத்தில் இருக்கையில், குடும்பத்தினரே அவருக்கு உணவூட்டுவது, குளிக்க வைப்பது ஆகியவற்றை செய்கின்றனர்.