News April 9, 2024

IPL: பஞ்சாப் அணி பவுலிங்

image

சண்டிகரில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் SRH அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது. இரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளைப் பெற்றுள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்? கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News April 24, 2025

நாளையும் வெயில் கொளுத்தும் .. வெளியே வராதீங்க

image

வெயிலின் தாக்கத்தால் மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று கரூர், திருச்சி, மதுரை, ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. நாளையும் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், காலை 11 முதல் மதியம் 3 மணி வரை மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 24, 2025

முதலில் ஏவுகணை.. இப்போது விமானப்படை..!

image

இந்தியா- பாக். இடையே போர் தொடங்கும் சூழல் நிலவிவரும் நிலையில், ரஃபேல், சுகோய்- 30 ஆகிய போர் விமானங்களில் இந்திய விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ‘ஆக்ரமன்’ என்ற பெயரில் இந்த பயிற்சியை வீரர்கள் செய்து வருகின்றனர். ஏற்கனவே ஏவுகணை வீசி சோதனை செய்த நிலையில், இப்போது விமானப்படையும் பயிற்சியில் ஈடுபடுகிறது. மறுபுறம், பாகிஸ்தானும் தனது எல்லைகளில் ராணுவத்தை குவித்து வருகிறது.

News April 24, 2025

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்தியர்கள் யார்?

image

இந்திய <<16203309>>படை வீரர் <<>>பாகிஸ்தானிடம் சிக்கிய நிலையில் ஏற்கனவே இந்திய வீரர்கள் சிக்கியதும் நினைவுபடுத்தப்படுகிறது. 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த போது, இந்திய கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கினார். 1999-ம் ஆண்டு கார்கில் போர் நடக்கும் போது இந்திய வீரர் நச்சிகேட்டா பாகிஸ்தானிடம் சிக்கினார். இருவரும் பல சித்திரவதைகளுக்கு பின் நாடு திரும்பினர்.

error: Content is protected !!