News April 16, 2024
IPL: சிறிது காலம் ஓய்வெடுக்க மேக்ஸ்வெல் முடிவு

உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியுள்ளதால், நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை என RCB வீரர் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதனால் எனக்கு பதிலாக வேறு யாராவது விளையாடட்டும் என டு பிளெஸிஸ் மற்றும் பயிற்சியாளர்களிடம் கூறினேன். உடல் மற்றும் மனதளவில் முன்னேற்றம் இருந்தால், நிச்சயம் விளையாடுவேன் எனக் கூறினார்.
Similar News
News April 29, 2025
ஆபாசப் படங்கள் தடை…ட்ரம்ப் மனைவி ஆதரவு

பழிவாங்கும் நோக்கத்துடன் பதிவேற்றப்படும் ஆபாசப் படங்களுக்கு தடைவிதிக்கும் மசோதாவை நிறைவேற்றுவதில் ட்ரம்ப் உறுதியாக உள்ளார். மசோதாவை, USA காங்கிரஸ் நிறைவேற்றி அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இது சட்டமானால், குழந்தைகளின் தனியுரிமை பாதுகாக்கப்படும் என்பதால் ட்ரம்ப் மனைவி மெலானியா ஆதரவளித்துள்ளார். தேநேரம், கருத்துரிமைக்கு எதிரானதாக இது மாறிவிடக்கூடாது என விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
News April 29, 2025
BREAKING: காலனி என்ற சொல் நீக்கம்: CM ஸ்டாலின்

காலனி என்ற சொல் அரசு ஆவணங்கள் மற்றும் பொதுப் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும் என்றார்.
News April 29, 2025
தூங்கா நகரத்தை நோக்கி விஜய்!

தவெகவின் அடுத்த பூத் கமிட்டி கருத்தரங்கை மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் இடம் பார்க்கும் பணி தொடங்கியுள்ளது. மே மாதம் பூத் கமிட்டி கருத்தரங்கம் அங்கு நடைபெற உள்ளது. கோவையில் கடந்த 26 மற்றும் 27-ம் தேதிகளில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.