News March 26, 2024

மனைவியின் உயிரைப் பறித்த ஐபிஎல் கடன்

image

கடன் தொல்லை காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த தர்ஷன் பாபு, ஐபிஎல் போட்டியில் பந்தயம் கட்டுவதில் ஆர்வம் கொண்டவர். கடந்தாண்டு சுமார் ரூ.1 கோடி வரை பந்தயம் கட்டி தோற்றதால், கடன் கொடுத்தவர்கள் அவரது மனைவி ரஞ்சிதாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலின் உச்சிக்கு சென்ற அவர், வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News January 27, 2026

10th முடித்தாலே வேலை… APPLY NOW!

image

இந்தியன் ஆயில் நிறுவனம், தென் மண்டலப் பிரிவில் காலியாக உள்ள 394 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. *கல்வித்தகுதி: 10th, டிகிரி. *தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு & சான்றிதழ் சரிபார்ப்பு. *வயது வரம்பு: 18- 24 வயதுக்குள். *உதவித்தொகை வழங்கப்படும். *கடைசி தேதி: பிப்.10. விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். SHARE IT!

News January 27, 2026

பிப்ரவரி நடுவில் கூட்டணி முடிவு: பிரேமலதா

image

பிப்ரவரி மாதம் முழுவதும் நேரம் இருக்கிறது, எனவே நல்ல முடிவெடுத்து பிப்., நடுவில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என பிரேமலதா கூறியுள்ளார். யார் யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்து வேட்பாளர்களை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தேமுதிக, தங்களது கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், நேற்று கவர்னர் தேநீர் விருந்தின்போது தேமுதிகவின் சுதீஷ், அதிமுக தலைவர்களுடன் பேசியது பேசுபொருளானது.

News January 27, 2026

சமஸ்கிருதத்துக்கு ₹2000 கோடி, தமிழுக்கு ₹30 கோடி: அமைச்சர்

image

கல்வி, 100 நாள் வேலை திட்டம் என பலவற்றுக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி வரவில்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார். சமஸ்கிருத ஆய்வுக்கு ₹2000 கோடி ஒதுக்கும் போது, தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு ₹30 கோடி கூட கொடுக்கவில்லை என்றும் சாடியுள்ளார். முதியோர் ஓய்வூதிய உள்பட பல திட்டங்களுக்கு, தமிழக அரசு நிதி ஒதுக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!