News May 3, 2024

IPL: கொல்கத்தா அணி தடுமாற்றம்

image

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. துஷாரா வீசிய முதல் ஓவரிலேயே, சால்ட் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, அவர் வீசிய இரண்டாவது ஓவரின் 2ஆவது பந்தில், ரகுவன்ஷியும்(13), கடைசிப் பந்தில் ஷ்ரேயஸ் ஐயரும் (6) ஆட்டமிழந்தனர். தற்போது, KKR 4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றது.

Similar News

News December 8, 2025

கடன் வாங்கியவர்களுக்கு GOOD NEWS

image

RBI ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்ததை தொடர்ந்து, பல வங்கிகள் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன. அதன்படி, PNB 8.35%-ல் இருந்து 8.10%ஆகவும், Bank of Baroda 8.15%-ல் இருந்து 7.90% ஆகவும், Bank of India (BOI) 8.35%-ல் இருந்து 8.10%-ஆகவும் குறைத்துள்ளன. இதனால், வீடு, கார், தனிநபர் கடனுக்கான வட்டி வெகுவாக குறைந்துள்ளது. இது கடன் வாங்கிய நடுத்தர வர்க்கத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News December 8, 2025

செங்கோட்டையன் விலகலுக்கு இபிஎஸ் காரணம்: டிடிவி

image

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு சென்றதற்கு EPS தான் காரணம் என TTV குற்றம் சாட்டியுள்ளார். செங்கோட்டையன் பொதுச்செயலாளர் பதவியோ, CM பதவியோ கேட்கவில்லை. ஒற்றுமையாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என வலியுறுத்தினார். ஆனால், துரோக சக்தியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரே KAS, வேறு கட்சிக்கு சென்றுள்ளார் எனக் கூறிய அவர், TVK கூட்டங்களை செங்கோட்டையன் சிறப்பாக வழிநடத்துவார் என்றார்.

News December 8, 2025

அலாரம் அடிச்சதும் பதறியடிச்சி எழுந்திருக்கிறீர்களா?

image

அதிக சத்தத்துடன் அலாரம் அடித்தும் டைம் ஆச்சு என பதற்றத்துடன் எழுவது இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். திடீரென இதயத்துடிப்பும் ரத்த அழுத்தமும் அதிகரிப்பதால், இதயத்திற்கு அதிக சுமை ஏற்பட்டு, ரத்த நாளங்களில் சுருக்கம், ரத்த ஓட்டம் குறைவது போன்ற பிரச்னைகள் வரலாம். எனவே, மெல்லிய சத்தம் கொண்ட அலாரமை 10 நிமிடங்கள் முன்பு வைத்து பழகுங்க. இது கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும்.

error: Content is protected !!