News April 29, 2025
IPL: KKR முதலில் பேட்டிங்

டெல்லியில் நடைபெறவிருக்கும் இன்றைய IPL போட்டியில், DC – KKR அணிகள் மோதவுள்ளன. இதற்கான டாஸில் வெற்றி பெற்று, முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளார் DC கேப்டன் அக்சர் படேல். தற்போதைய நிலவரப்படி, புள்ளிப்பட்டியலில் DC 4-வது இடத்திலும், KKR 7-வது இடத்திலும் உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெற்றால் DC அணி முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. யார் வெல்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
Similar News
News December 6, 2025
விஜய் பொதுக்கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி

புதுச்சேரியில் வரும் 9-ம் தேதி விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க முடியும் எனவும், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் போலீசார் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
News December 6, 2025
சமூகநீதியை காக்க உறுதியேற்போம்: விஜய்

தவெக அலுவலகத்தில் அம்பேத்கரின், படத்திற்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். அம்பேத்கர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையை பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம் என சூளுரைத்துள்ளார். மேலும், அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர் அம்பேத்கர் என்றும் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
News December 6, 2025
ஜார்கண்டிடம் சரணடைந்த தமிழ்நாடு அணி

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஜார்கண்ட் அணியிடம் தமிழ்நாடு வீழ்ந்தது. முதலில் விளையாடிய ஜார்கண்ட் அணியில் குமார் குஷாக்ரா(84), விராட் சிங்(72) ஆகியோர் TN பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் தமிழ்நாட்டுக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், சாய் சுதர்சனை தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதால், 20 ஓவர்களில் 179 ரன்களை மட்டுமே எடுத்த TN, தோல்வியடைந்தது.


