News April 12, 2025
IPL: வெளியேறிய முக்கிய வீரர்!

நடப்பு IPL தொடரில் இருந்து, க்ளென் பிலிப்ஸ் காயம் காரணமாக விலகியிருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. GT அணிக்காக விளையாடி வரும் இவர், SRH அணிக்கு எதிரான மேட்ச்சின் போது, இடுப்பில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக பிலிப்ஸ் நியூசிலாந்து புறப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இன்று GT அணி, LSG அணியை எதிர்கொள்ள உள்ளது.
Similar News
News November 20, 2025
‘SORRY அம்மா.. நான் சாகப் போறேன்’

டெல்லியில் 10-ம் வகுப்பு மாணவன் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தனது பள்ளி HM, ஆசிரியர்கள் மனரீதியாக டார்ச்சர் செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதிவைத்துள்ளார். Sorry அம்மா பலமுறை உங்களை காயப்படுத்தி இருக்கிறேன், கடைசி முறையாக இப்போதும் அதை செய்துள்ளேன்; எனது உடல் உறுப்புகளை தானம் செய்துவிடுங்கள் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News November 20, 2025
இந்த எண்களை தெரியாமல் இருக்காதீங்க!

அவசர நேரத்தில் இந்த ஹெல்ப்லைன் எண்களை தெரிந்து வைத்திருப்பது உங்களது உயிரையே காக்கலாம். தீயணைப்புத்துறை – 101, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு- 181, குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் – 1098, குழந்தைகள் காணாமல் போனால்- 1094, ராகிங் தொல்லைக்கு ஆளானால்- 1800-180-5522, இலவச மருத்துவத்துக்கு – 104 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இது அனைவருக்கும் உதவும், கண்டிப்பாக SHARE THIS.
News November 20, 2025
மசோதாவை கிடப்பில் போட கவர்னருக்கு அதிகாரமில்லை: SC

மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க 3 மாதங்கள் கெடு விதித்தது தொடர்பாக ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகளுக்கான மனுவை SC-ன் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அதில், அரசியல் சாசனத்தின்படி மசோதா மீது முடிவெடுக்க கவர்னருக்கு 3 மாதங்களே அவகாசம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


