News May 17, 2024
IPL: முதல் போட்டியில் எந்தெந்த அணிகள் மோதின தெரியுமா?

கிரிக்கெட் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ஐபிஎல், 2008இல் தொடங்கியது. இதன் முதல் போட்டி, ஆர்சிபி, கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட் செய்த கொல்கத்தா, 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது. மெக்கல்லம் 158 ரன் விளாசினார். இதையடுத்து விளையாடிய ஆர்சிபி, 82 ரன்னில் சுருண்டது. டிராவிட் 2, கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். கொல்கத்தா 140 ரன் வித்தியாசத்தில் வென்றது.
Similar News
News August 9, 2025
திருமாவளவன் காணாமல் போவார்: EPS

<<17349030>>MGR-ஐ<<>> விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார் என்று EPS கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி, அதிமுக எனவும் தெரிவித்தார். NDA கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்று ஓபிஎஸ்தான் சொல்ல வேண்டும் எனக் கூறிய அவர், 8 மாதங்களில் சிறப்பான கூட்டணி அமைத்து, 2026-ல் அதிமுக ஆட்சியமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
TN மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வைத்து கைது செய்துள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்ததோடு, படகு, வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அண்மையில் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து வருவதாக மீனவர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
News August 9, 2025
30 ஆண்டுகளாக PM மோடிக்கு ராக்கி கட்டும் PAK பெண்!

PM மோடிக்கும் PAK பெண் ஒருவருக்கு இருக்கும் சகோதரத்துவ பந்தம் வியப்பில் ஆழ்த்துகிறது. பாகிஸ்தானில் பிறந்த கமர் மொஹ்சின் ஷேக், இந்தியர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு அகமதாபாத்தில் செட்டிலாகினார். 90-களில் மோடியை(அப்போது அவர் CM கூட இல்லை) முதன்முதலில் சந்தித்து ராக்கி கட்டிய கமர், அப்பழக்கத்தை 30 ஆண்டுகளாக தொடர்கிறார். ராக்கியை அவர் வாங்குவதில்லை, அவரே ஸ்பெஷலாக தனது கையால் தயாரிக்கிறார்.