News April 29, 2025
IPL: DC அணிக்கு 205 ரன்கள் இலக்கு

டெல்லியில் நடைபெற்று வரும் IPL போட்டியில், DC அணிக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது KKR. டாஸ் வென்ற DC அணியின் கேப்டன் அக்சர் படேல், பவுலிங் செய்ய தீர்மானித்தார். அதனைத் தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய KKR அணியின் வீரர்கள் அனைவரும் நிலைத்து விளையாடி ரன் சேர்த்தனர். அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன்கள் குவித்தார். பின்னர், 20 ஓவர்கள் முடிவில் KKR 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது.
Similar News
News April 30, 2025
சூர்யவன்ஷியின் அடுத்த இலக்கு இதுதான்!

இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக இன்னும் கடுமையாக உழைப்பேன் என RR வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். நாட்டுக்காக விளையாடி, சிறந்த பங்களிப்பை கொடுப்பதே தனது லட்சியம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தான் கொண்டாடப்படுவதற்கு மூலக் காரணம் தனது பெற்றோர்கள் பட்ட கஷ்டம் தான் எனவும் கூறியுள்ளார். GT-க்கு எதிரான நேற்றைய போட்டியில் 35 பந்துகளுக்கு சதம் விளாசி பல சாதனைகளை அவர் படைத்தார்.
News April 30, 2025
PAK-கிற்கு பதிலடி? இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக இன்று மத்திய அமைச்சரவை கூடுகிறது. காலை 11 மணிக்கு தொடங்கும் PM மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், PAK-கிற்கு எதிராக ராணுவ பதிலடி உள்பட முக்கிய விஷயங்கள் குறித்து முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த 23-ம் தேதி கூடிய பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், சிந்து நதி நீர் நிறுத்தம் உள்பட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
News April 30, 2025
தலை இல்லாத பிரதமர்.. காங். சர்ச்சை பதிவு

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் PM மோடி பங்கேற்காததை விமர்சித்து, அவரது தலை இல்லாத புகைப்படத்தை காங். சமூக வலைதளங்களில் பகிர்ந்தது. இது கடும் சர்ச்சைக்குள்ளான நிலையில், பாக். பாசத்தை காங். காட்டுவதாக பாஜக விமர்சித்திருந்தது. அதேபோல், இது மக்களிடம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என உட்கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் எழுந்ததால், அப்பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது.