News May 7, 2025
IPL: CSK முதலில் பேட்டிங்

சென்னையில் நடைபெறும் இன்றைய IPL போட்டியில், CSK – PBKS அணிகள் மோதவுள்ளன. இதற்கான டாஸை வென்ற PBKS கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்துள்ளார். புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் PBKS அணி, முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறும் முனைப்போடு களம் இறங்கவுள்ளது. அதேநேரம், ஆறுதல் வெற்றிகளை பெற CSK முயற்சித்து வருகிறது.
Similar News
News August 22, 2025
சீமானை காப்பியடித்தாரா விஜய்?

இளவரசரை தேர்வு செய்ய நெல்மணியை கொடுத்து பயிராக்க சொன்னாராம் மன்னர். அதை பெற்றுச் சென்றவர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் முளைத்த கதிரோடு வந்தனர். ஆனால் கொடுத்த விதையை அப்படியே கொண்டு வந்தவரே இளவரசரானார். ஏனென்றால் அவர் கொடுத்தது அவித்த விதை. இந்த கதையையே தவெக மாநாட்டில் விஜய் சொன்னார். இது ஏற்கெனவே 2021-ல் சீமான் கூறியிருக்கிறார். எனவே சீமானை விஜய் காப்பியடித்துள்ளதாக நாதகவினர் கூறி வருகின்றனர்.
News August 22, 2025
கோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகினால் அபசகுணமா..?

கோயிலில் தேங்காய் உடைக்கும் போது, பூ வந்தால் நல்லது என்றும், கொப்பரையாக இருந்தால் குழந்தை பேறு உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், தேங்காய் அழுகி இருந்தால், அபசகுணம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் உண்மையில், உங்கள் குடும்பத்தை பிடித்திருந்த துர்சக்திகள், பீடைகள், கண் திருஷ்டிகள் நீங்கியதற்கான அறிகுறி என்ற ஆன்மிக விளக்கங்களும் உள்ளன. ஆகவே, மனம் சஞ்சலம் அடைய வேண்டாம். SHARE IT.
News August 22, 2025
முகேஷ் அம்பானியின் தாயார் ஹாஸ்பிடலில் அனுமதி

முகேஷ் அம்பானியின் தாயாரும், மறைந்த திருபாய் அம்பானியின் மனைவியுமான கோகிலாபென் அம்பானி(91), உடல்நலக் குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், ஹெலிகாப்டர் மூலம் தெற்கு மும்பையிலுள்ள HN ரிலையன்ஸ் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.