News May 1, 2024
IPL: சென்னை அணி பேட்டிங்

சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து, இன்னும் சற்று நேரத்தில் CSK பேட்டிங் செய்ய உள்ளது. CSK அணியில் சிறு மாற்றமாக பதீரனா, தேஷ்பாண்டேவிற்குப் பதிலாக ரிச்சர்ட் க்ளாசென், ஷர்துள் விளையாடுகின்றனர். புள்ளிப் பட்டியலில் CSK நான்காவது இடத்திலும், PBKS 8ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
Similar News
News April 7, 2026
ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தம்

சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரமாண பத்திரத்தில் வருமானம், சொத்து & நிறுவனம் தொடர்பான தகவலை மறைத்ததாக திமுகவினர் புகார் தெரிவித்ததால், அவரின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழிசையின் கடும் எதிர்ப்பால், மயிலாப்பூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மயிலை வேலுவின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
News April 7, 2026
திருமணம் சர்ச்சை.. த்ரிஷா பரபரப்பு பதிவு!

சினிமாவிலிருந்து விலகும் முடிவில் த்ரிஷா உள்ளதாக SM-களில் தகவல் பரவியது. இந்நிலையில், கோபத்துடன் த்ரிஷா பதிவிட்ட இன்ஸ்டா ஸ்டோரி வைரலாகிறது. அதில், நான் சினிமாவை விட்டுவிட்டேன். ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டேன், 2 வயதுடைய 4 குழந்தைகளை வளர்த்து வருகிறேன் போல. இன்றைய பொய் கதைக்கான அளவு போதுமா? (அ) இன்னும் ஏதேனும் சேர்க்க வேண்டுமா என்று கேட்டு, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
News April 7, 2026
தமிழன் பிரசன்னா வேட்புமனு ஏற்பதில் குழப்பம்

கொளத்தூரில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினின் வேட்புமனு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தருமபுரியில் சௌமியா அன்புமணி, சேப்பாக்கத்தில் உதயநிதி, மயிலாப்பூரில் தமிழிசை, காட்பாடியில் துரைமுருகன், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், சாத்தூரில் நயினார் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. ஆனால், எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னா வேட்புமனுவை ஏற்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் சலசலப்பு நிலவி வருகிறது.


