News April 16, 2024
IPL: முதலிடத்தை தக்க வைக்குமா ராஜஸ்தான்?

RR – KKR இடையேயான 31ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளும் தலா 1 போட்டியில் தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் (RR -1, KKR -2) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆனால், புள்ளி வாரியாக (10 புள்ளிகள்) RR அணி முதலிடத்தில் உள்ளது. சொந்த மண்ணில் நடக்கும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று KKR அணி முதலிடத்தை பிடிக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Similar News
News December 4, 2025
தமிழக மக்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது: பாஜக

இன்றே தீபத்தை ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், திருப்பரங்குன்றத்திற்கு நயினார் நாகேந்திரன் விரைந்துள்ளார். அப்போது தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்த நயினார் நாகேந்திரன், தமிழக மக்களுக்கு நீதி கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். தீபத்தூணில் தீபம் ஏற்றுவதால் யாருக்கு என்ன பிரச்னை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
News December 4, 2025
₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. வந்தது HAPPY NEWS

டிச.12-ம் தேதி விடுபட்ட, தகுதி வாய்ந்த அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என DCM உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். விடுபட்டவர்களிடம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், டிச.12-ல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில், கூடுதல் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
News December 4, 2025
நெசவாளர்களுக்கு துரோகம் செய்த திமுக: EPS

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க திமுக அரசு முயற்சிப்பதாக EPS கண்டனம் தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு வழங்கும் வேஷ்டி மற்றும் சேலைகள் 50% மேல் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கப்படுவதால், தமிழக நெசவாளர்கள் பாதிப்பை சந்திப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். திமுக செய்துள்ள துரோகத்திற்கு, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் 2026 தேர்தலில் பதிலடி தருவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.


