News July 26, 2024
IPL: ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைக்கலாம்?

ஐபிஎல்லில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் ஆறு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள பிசிசிஐ அனுமதிக்கும் என்று தெரிகிறது. இதில் நான்கு உள்ளூர் மற்றும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்து வரும் 31ஆம் தேதி நடைபெறும் பிசிசிஐ-ஐபிஎல் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். எட்டு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள உரிமையாளர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.
Similar News
News March 6, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 9-ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. இதனை ஈடுசெய்ய மார்ச் 14 (சனி) வேலைநாளாகும். இதேபோல், பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு மார்ச் 10 உள்ளூர் விடுமுறையாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.
News March 6, 2026
கூட்டிக் கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்

1 முதல் 9-க்குள் ஏதாவது ஒரு நம்பரை நினைத்துக் கொள்ளுங்கள். அதை 3-ஆல் பெருக்குங்கள். அதில் வரும் விடையோடு 3-ஐ கூட்டுங்கள். அந்த விடையை மீண்டும் மூன்றால் பெருக்குங்கள். இப்போது உங்களுக்கு ஒரு இரட்டை இலக்க எண் கிடைத்திருக்கும். அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்டுங்கள். இப்போது, உங்களுக்கு கிடைத்திருக்கும் விடை 9. சரியாக இருந்தால் ஷேர் பண்ணுங்க.
News March 6, 2026
PM KISAN திட்டத்தின் தவணை ₹2,000.. வந்தாச்சு HAPPY NEWS

PM KISAN திட்டத்தின் 22-வது தவணையை (₹2,000) மார்ச் 13-ம் தேதி டெபாசிட் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் அசாமில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் PM மோடி, இதற்கான நிதியை விடுவிக்க இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பாக, pmkisan.gov.in இணையதளம் சென்று Know Your Status ஆப்சன் மூலம் பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள்.


