News November 24, 2024
IPL Auction: ₹26.75 கோடிக்கு ஐயரை வாங்கிய PBKS

2024ம் ஆண்டு KKR அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான ஷ்ரேயஸ் ஐயர் ஏலத்தில் ₹26.75 கோடிக்கு PBKS அணியால் வாங்கப்பட்டுள்ளார். Bidding’ஐ KKR அணி தொடங்கிய நிலையில், அவருக்காக பஞ்சாப், டெல்லி அணிகள் கடுமையாக போட்டி போட்டன. இறுதியாக அவரை, ₹26.75 கோடிக்கு PBKS அணி வாங்கியது. Stay tuned with Way2News for IPL live Auction Updates….
Similar News
News January 7, 2026
ஆடு, கோழிகளுக்கு உயிர் இல்லையா? SC கேள்வி

தெருநாய்கள் மேலாண்மை தொடர்பான வழக்குகளை SC விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையில், நாய்களின் உரிமைகள் குறித்து நாய் ஆர்வலர்கள் வாதிட்டபோது, மற்ற விலங்குகளின் நிலை என்னவென்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆடு, கோழிகளுக்கு உயிர் இல்லையா என்றும் காட்டமாக கேட்டனர். பள்ளிகள், ஹாஸ்பிடல்கள், கோர்ட்டுகள் உள்ளிட்ட பொது நிறுவனங்களுக்கு உள்ளே தெருநாய்களை அகற்றுவது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
News January 7, 2026
BREAKING: விலை ₹6,000 குறைந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் மாலையில் குறைந்துள்ளது. காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ₹12, கிலோவுக்கு ₹12,000 உயர்ந்தது. ஆனால், மாலையில் கிராமுக்கு ₹6 குறைந்து ₹277-க்கும், கிலோவுக்கு ₹6,000 குறைந்து ₹2,77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இறங்குமுகத்தில் இருப்பதால், நம்மூரிலும் நாளை விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News January 7, 2026
காவலாளி அஜித்குமார் மரணம்.. கோர்ட் அதிரடி உத்தரவு

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், டிஎஸ்பி சண்முக சுந்தரம் முன்ஜாமின் கோரி மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இம்மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, டிஎஸ்பியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என காவல்துறையை கேள்வி எழுப்பிய நீதிபதி, அவரின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


