News November 24, 2024

அடேங்கப்பா…IPL’ன் பணக்கார வீரரான ரிஷப் பண்ட்!!

image

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரிஷப் பண்ட், ஏலத்தில் ₹27 கோடிக்கு LSG அணியால் வாங்கப்பட்டார். பண்ட்டிற்காக LSG, RCB, SRH அணிகள் போட்டியிட்டன. அவருக்காக DC அணி RTM பயன்படுத்தி ₹7 கோடியை அதிகரித்த போதிலும், LSG அணி அவரை வாங்கியது. இதன் மூலம், IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையும் பெற்றார் பண்ட். Stay tuned with Way2News for IPL live auction updates….

Similar News

News November 8, 2025

அஜித் குமார் மரணம்… அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

image

காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கோர்ட் விடுத்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், டெல்லியில் இருந்து தடயவியல் பரிசோதனை முடிவுகள் வரவில்லை, அதனால்தான் தாமதம் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 3 வாரத்தில் பரிசோதனை முடிவுகளை வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News November 8, 2025

டாப் 10 மகிழ்ச்சியான நகரங்கள்.. நம்பர் 1 எது பாருங்க

image

ஆசியாவில் மிகவும் மகிழ்ச்சியான நகரம் எது தெரியுமா? நம்பர் 1 இடம் உங்களை ஆச்சரியப்படுத்தும். ஆசிய நகரங்களில் 18,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களிடம் டைம் அவுட் நடத்திய கணக்கெடுப்பின்படி, 2025-ம் ஆண்டிற்கான ஆசியாவின் டாப் 10 மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியிடப்பட்டுள்ளன. அவை என்னென்ன நகரங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT

News November 8, 2025

சீமானின் பொது சேவை தொடர EPS வாழ்த்து

image

சீமானின் பிறந்தநாளையொட்டி EPS அவருக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுள் மற்றும் உடல் நலத்துடன், தொடர்ந்து பொது சேவையாற்றிட இறைவனை வேண்டுவதாக, தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அரசியலில் எதிர் எதிர் நிலைப்பாட்டில் இருந்தாலும், அவரின் மீது உள்ள தனிப்பட்ட மரியாதையின் காரணமாக EPS வாழ்த்து தெரிவித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!