News November 24, 2024
IPL Auction: ₹15.75 கோடிக்கு ஏலம் போன ஜோஸ் பட்லர்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர், நடைபெற்ற ஏலத்தில் ₹15.75 கோடிக்கு GT அணியால் வாங்கப்பட்டுள்ளார். பட்லருகாக கடுமையாக GT, RR, DC, PBKS, LSG அணிகள் போட்டியிட்டன. இறுதியில் அவரை GT அணி வாங்கியது. பட்லர் அதிகபட்சமாக 2021ல் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 124 ரன்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Stay tuned with Way2News for IPL live Auction Updates….
Similar News
News November 21, 2025
BREAKING: விலை ₹7,000 குறைந்தது

வெள்ளி விலை 2 நாள்களில் கிலோவுக்கு ₹7,000 குறைந்துள்ளது. நேற்று(நவ.20) ₹3,000 குறைந்த நிலையில், இன்று ₹4,000 குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் 1 கிராம் ₹169-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,69,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை வரும் நாள்களிலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளதால், முதலீடு நோக்கத்தில் வாங்குவோர் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.
News November 21, 2025
இறந்த பின்பும் சார்லஸை பழிவாங்கும் டயானா

பாரிஸில் உள்ள கிரெவின் அருங்காட்சியத்தில், பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் மெழுகுச்சிலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனின் தற்போதைய அரசரும், EX கணவருமான சார்லஸ், திருமணத்தை மீறிய உறவை ஒப்புக்கொண்ட அன்று, அவரை பழிவாங்க கருப்பு நிற ஆடையை டயானா அணிந்தார். அதே உடையில் தற்போது மெழுகுச்சிலை திறக்கப்பட்டுள்ளது. 1997-ல் பாரிஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
News November 21, 2025
கவர்னருக்கு கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: CM

மசோதாக்களை நிறைவேற்ற கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் சட்டம் திருத்தப்படும் வரை ஓயமாட்டோம் என்று CM ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்தால் மாநில அரசுகள் வழக்கு தொடுக்க உரிமை உள்ளது என்பதை <<18340284>>SC<<>> உறுதி செய்துள்ளதாக கூறிய அவர், எந்த அதிகாரமும் அரசியலமைப்பை விட பெரிதல்ல என்று குறிப்பிட்டுள்ளார். மாநில உரிமைகளை நிலைநாட்டும் வரை போராடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.


