News October 14, 2024
சிங்கப்பூரில் IPL ஏலம்?

2025 IPL வீரர்கள் ஏலத்தை சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், சவூதி அரேபியாவின் ரியாத், ஜெட்டாவில் நடத்துவது குறித்தும் பரிசீலித்து வருவதாக அத்தகவல் கூறுகிறது. முன்னதாக, 2024ம் ஆண்டு IPL வீரர்கள் ஏலத்தை துபாயில் பிசிசிஐ நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 17, 2025
உடனே ஓடிவர திமுகவினர் என்ன பழனிசாமியா? ஸ்டாலின்

உறவினர் வீட்டில் ED ரெய்டு என்றால், ஓடிவந்து கூட்டணியில் சேர்வதற்கு நாங்கள் என்ன பழனிசாமியா என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எங்களை மிரட்ட நினைப்பவர்கள் இன்று மிரண்டு போயிருப்பதாகவும் கூறினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என எச்சரித்ததோமோ அதுவெல்லாம் நடப்பதாகவும், ஒத்துவராத எதிர்கட்சிகள் ED-யை கொண்டு மிரட்டப்படுவார்கள் என கூறியிருந்தோம் அதுவும் நடப்பதாக கூறினார்.
News August 17, 2025
ஆகஸ்ட் 17: வரலாற்றில் இன்று

1934 – முரசொலி மாறன் பிறந்த தினம்.
1945 – ஜப்பானிடமிருந்து இந்தோனேசியா விடுதலை பெற்ற நாள்.
1947 – இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிளிஃப் கோடு வெளியிடப்பட்டது.
1962 – விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த தினம்.
1963 – திரைப்பட இயக்குநர் சங்கர் பிறந்த தினம்.
2008 – அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
News August 17, 2025
திருமா மரியாதையை காப்பாத்தனும்: EPS அறிவுரை

திமுகவின் பாவமூட்டைகளை திருமாவளவன் சுமக்க வேண்டாம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். செங்கம் பகுதியில் மக்கள் மத்தியில் பேசிய அவர், மக்கள் மத்தியில் திருமாவளவனுக்கு ஒரு மரியாதை உள்ளது என்றும், அதனை அவர் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றார். சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டு, வேறு வழியின்றி அவர்கள் சொல்வதை எல்லாம் திருமாவளவன் பேசுவதாகவும் தெரிவித்தார்.