News April 29, 2025
IPL: 4 சதங்களுமே மேஜிக்தான்!

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதை அடித்த 4 வீரர்களும் இந்தியர்கள்தான். அதிலும் அனைத்து பேட்ஸ்மேன்களும் லெஃப்ட் ஹேண்ட் என்பது தான் இதில் கூடுதல் சிறப்பு. பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் 141 ரன்களும், ராஜஸ்தானுக்கு எதிராக கிஷன் 106, சென்னைக்கு எதிராக பிரியான்ஷ் 103 மற்றும் குஜராத்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் சூர்யவன்ஷி 101 ரன்களையும் அடித்துள்ளனர்.
Similar News
News January 9, 2026
சதத்தில் சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்

விஜய் ஹசாரே தொடரில் நேற்று கோவாவுக்கு எதிராக சதம்(131) அடித்த ருதுராஜ் கெய்க்வாட் பல சாதனைகளையும் படைத்துள்ளார். அதாவது, VHT-ல் அதிக சிக்சர்களை(112) அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதேபோல் VHT-ல் அதிக சதம் அடித்த வீரரான அன்கித் பாவ்னேவின்(15) சாதனையையும் அவர் சமன் செய்தார். முதல் தர போட்டிகளில் ரன்களை வாரிக்குவித்தாலும் ருதுவுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது சவாலாகவே உள்ளது.
News January 9, 2026
வரலாற்றில் இன்று

*1788 – அமெரிக்காவின் 5-வது மாநிலமாக கனெடிகட் இணைந்தது.
*1915 – தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாத்மா காந்தி மும்பை வந்து சேர்ந்தார்.
*1921 – புனித ஜார்ஜ் கோட்டையில் மெட்ராஸ் சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. *1951 – நியூயார்க்கில் ஐநா தலைமையகம் திறக்கப்பட்டது.
*1951 – நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் பிறந்ததினம்.
*1976 – நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்த தினம்.
News January 9, 2026
ஆட்சியில் பங்கு இப்போது முக்கியமல்ல: கார்த்தி சிதம்பரம்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தரப்பில் வலுவாக வைக்கப்படுகிறது. இதனிடையே அனைத்துக் கட்சிகளுக்கும் ஆட்சியில் தங்களுடைய பிரதிநித்துவம் இருக்க வேண்டும் என விரும்புவார்கள் என கார்த்தி சிதம்பரம் தெரித்துள்ளார். அதேசமயம் தேர்தல் வெற்றிதான் இப்போது முக்கியம் என்பதால், ஆட்சி அதிகாரம் குறித்து தேர்தலுக்கு பின் பேசிக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.


