News April 29, 2025
IPL: 4 சதங்களுமே மேஜிக்தான்!

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதை அடித்த 4 வீரர்களும் இந்தியர்கள்தான். அதிலும் அனைத்து பேட்ஸ்மேன்களும் லெஃப்ட் ஹேண்ட் என்பது தான் இதில் கூடுதல் சிறப்பு. பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் 141 ரன்களும், ராஜஸ்தானுக்கு எதிராக கிஷன் 106, சென்னைக்கு எதிராக பிரியான்ஷ் 103 மற்றும் குஜராத்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் சூர்யவன்ஷி 101 ரன்களையும் அடித்துள்ளனர்.
Similar News
News December 8, 2025
இரவிலும் உறங்காமல் உழைக்கிறேன்: மு.க.ஸ்டாலின்

எத்தனை எதிரிகள் வந்தாலும் TN-ஐ மீண்டும் ஆளப்போவது உதயசூரியன்தான் என ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக மா.செ.க்கள், நகரம், ஒன்றியம், பேரூர் நிர்வாகிகளிடம் பேசிய அவர், இந்த ஆட்சியின் சிறப்பான பணிகளை பார்த்து நடுநிலை வாக்காளர்களும் ஆதரவாக நிற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தான் இரவிலும் உறங்காமல் உழைப்பதாகவும், அதேபோல அனைவரும் அப்படி உழைக்க வேண்டும் எனவும் திமுகவினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News December 8, 2025
இந்திய அணிக்கு 10% அபராதம் விதித்த ICC

தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான ODI தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்தது. இதில் 2-வது போட்டியில் இந்திய அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால், ICC அபராதம் விதித்துள்ளது. போட்டி கட்டணத்தில் இருந்து 10% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SA இடையேயான டி20 தொடர் நாளை கட்டாக்கில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 8, 2025
சபரிமலையில் 10 பேர் உயிரிழப்பு.. தொடரும் சோகம்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவ.16-ல் நடை திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றனர். முதல் 10 நாள்களில், கோவை பக்தர் முரளி உள்பட 9 பேர் உடல்நலக் குறைவால் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், இன்று கடலூர் பக்தர் சுந்தர்(66), மாரடைப்பால் இறந்துள்ளார். பாதுகாப்பாக இருங்கள் பக்தர்களே!


