News March 16, 2025
IPL: இந்த அணிக்கும் காத்திருக்கும் அதிர்ச்சி

அடுத்த வாரம் IPL தொடங்க உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிர்ச்சி கிடைத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு பெங்களூருவில் உள்ள NCA இன்னும் அனுமதி சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் வரும் 23ம் தேதி SRH அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க முடியாது எனத் தெரிகிறது. பங்கேற்றாலும், பேட்டிங் மட்டும்தான் செய்வார். விக்கெட் கீப்பிங்கில் இருந்து விலக்கி வைக்கப்படுவார் எனத் தெரிகிறது.
Similar News
News March 16, 2025
IPL-க்கு நிதிஷ் ரெட்டி தயார்.. கிடைத்தது கிரீன் சிக்னல்

இளம் ஆல்ரவுண்டரான நிதிஷ் ரெட்டி இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது காயமடைந்தார். இதனையடுத்து காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சி நடைமுறைகளை பெங்களூருவில் உள்ள NCA-வில் அவர் மேற்கொண்டார். தற்போது அவர் முழு உடல் தகுதி பெற்றதாக மருத்துவக் குழு தெரிவித்ததையடுத்து, IPL போட்டி விளையாடுவதற்கு கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது. விரைவில் SRH-வுடன் நிதிஷ் இணைகிறார்.
News March 16, 2025
ஹேங் ஓவரில் இருந்து விடுபட இதை ட்ரை பண்ணுங்க

இரவில் மது அருந்திய ‘மப்பு’ தீரலையா? காலையில் எழுந்ததும் தாகம் தீரும் அளவிற்கு தண்ணீர் குடித்தால், நீர்ச்சத்து உயர்ந்து மந்தம் குறையும் *மிட்டாய் சுவைக்கலாம், கஃபைன் இல்லாத சோடா குடிக்கலாம் *மிளகு டீ, இஞ்சி டீ, கிரீன் டீ அருந்தினால் தலைவலி குறையும், மந்தமான நிலை மாறும் *பசித்தாலும் அதிகம் சாப்பிட வேண்டாம். *வாழைப்பழம், பிஸ்கட், வெண்ணெய் தடவிய ரொட்டி சாப்பிடலாம் *மீண்டும் மது குடிக்காதீர்.
News March 16, 2025
முடிச்சுடுங்க! ராணுவத்துக்கு டிரம்ப் உத்தரவு…

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வலுவான தாக்குதலை நடத்துமாறு அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடல் கொள்ளை, வன்முறை, தீவிரவாதம் என தீராத பிரச்னையாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருப்பதாக அவர் சாடியுள்ளார். இனிமேலும், அவர்களுக்கு ஈரான் பக்கபலமாக இருந்தால் விளைவுகள் மிகுந்த மோசமாக இருக்கும் எனவும் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.