News March 24, 2025
IPL: ஒரே ஓவரில் 6, 6, 6, 6

டெல்லிக்கு எதிரான இன்றைய IPL போட்டியில் லக்னோ வீரர் நிக்கோலஸ் பூரன், 75 ரன்கள் அடித்து அசத்தினார். குறிப்பாக, 13ஆவது ஓவரில் அவர் 0, 6, 6, 6, 6, 4 என 28 ரன்கள் குவித்தார். ஸ்டப்ஸ் வீசிய இந்த ஓவரில் பந்து நான்கு புறங்களிலும் பறக்க விடப்பட்டது. பின்னர், 15ஆவது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் பூரன் க்ளீன் போல்ட் ஆனார். இருப்பினும், அவரது பங்களிப்பு லக்னோ அணியை வலுவான இடத்தில் நிறுத்தியிருக்கிறது.
Similar News
News December 4, 2025
கும்பலாக சுற்ற அருமையான இடங்கள்!

கும்பலாக நண்பர்களுடன் சுற்றுலா செல்வது என்பது நினைவில் நிற்கும் ஒரு அழகான அனுபவம். பயணத்தின் ஒவ்வொரு நொடியும், கலகலப்பும், புதிய இடங்களை பார்க்கும் உற்சாகமும் கலந்ததாக இருக்கும். புது உணவுகளை சுவைத்து, புகைப்படங்கள் எடுப்பது, பயணத்தை மேலும் இனிமையாக்கும். எந்தெந்த இடங்களுக்கு கும்பலாக செல்லலாம் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 4, 2025
உஷார்.. தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் பேர் பாதிப்பு

தொடர் கனமழை காரணமாக சென்னை, கோவை, தஞ்சை, கடலூர், மதுரை மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை டெங்குவால் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தினமும் 25 – 30 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எனவே, தேங்கி இருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்துங்கள், காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகுங்கள்.
News December 4, 2025
அநாகரிக அரசியல் எப்போது நிறுத்தப்படும்? அண்ணாமலை

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற போலீசார் மறுத்துவருவதால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இதனிடையே தமிழக மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தும் தங்கள் அநாகரிக அரசியல் நாடகங்களை DMK எப்போது நிறுத்தப் போகிறது என அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இனியாவது கோர்ட்டின் உத்தரவை மதிப்பார்களா, அல்லது தங்கள் வழக்கமான பிரிவினை நாடகங்களை தொடர போகிறார்களா எனவும் கேட்டுள்ளார்.


