News September 28, 2024

IPL 2025 : போட்டிகளின் எண்ணிக்கை உயருமா?

image

IPL 2025 தொடரில் போட்டிகளின் எண்ணிக்கை 84ஆக உயர்த்தப்படாது என்று BCCI செயலாளர் ஜெய்ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். 10 அணிகள் இடையிலான IPL கிரிக்கெட்டில் கடந்த சீசனில் மொத்தம் 74 ஆட்டங்கள் நடந்தன. இது 2025இல் 84ஆக மேலும் உயர்த்தப்படலாம் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக பதிலளித்த ஜெய்ஷா, “இந்திய வீரர்களின் பணிச்சுமையை பார்க்க வேண்டியுள்ளது. 84 ஆட்டங்கள் என்பது ஒப்பந்தத்தில் உள்ளது தான்” என்றார்.

Similar News

News August 25, 2025

1+ 1= 3..! பிரபல நடிகை கர்ப்பம்!

image

1+ 1 = 3 என குட்டி கால் தடங்கள் இருக்கும் கேக்கை பதிவிட்டு, பிரபல பாலிவுட் பட நடிகை பரினீதி சோப்ரா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இவர், 2023-ல் ஆம் ஆத்மி கட்சி MP ராகவ் சத்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2011-ம் ஆண்டு ஹிந்தி திரையுலகில் அறிமுகமான பரினீதி, Ishq, Shuddh desi romance, Golmaal again என மெகா ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் பிரியங்கா சோப்ராவின் தங்கையாவார்.

News August 25, 2025

வியாழக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்.. அறிவிப்பு

image

ஆக.28-ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. தொலைவுக்கு புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 25, 2025

சிறையில் இருந்தே அரசை நடத்த வேண்டுமா? அமித்ஷா

image

PM, CM பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக சிறை செல்லும் அரசியல்வாதிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யாமல் இருக்கும் போக்கு உருவாகியுள்ளதாக அமித்ஷா சாடியுள்ளார். சிறையில் இருந்தே யாராவது அரசை நடத்த வேண்டுமா? என கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் சில அமைச்சர்கள் ராஜினாமா செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

error: Content is protected !!