News September 28, 2024

IPL 2025 : போட்டிகளின் எண்ணிக்கை உயருமா?

image

IPL 2025 தொடரில் போட்டிகளின் எண்ணிக்கை 84ஆக உயர்த்தப்படாது என்று BCCI செயலாளர் ஜெய்ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். 10 அணிகள் இடையிலான IPL கிரிக்கெட்டில் கடந்த சீசனில் மொத்தம் 74 ஆட்டங்கள் நடந்தன. இது 2025இல் 84ஆக மேலும் உயர்த்தப்படலாம் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக பதிலளித்த ஜெய்ஷா, “இந்திய வீரர்களின் பணிச்சுமையை பார்க்க வேண்டியுள்ளது. 84 ஆட்டங்கள் என்பது ஒப்பந்தத்தில் உள்ளது தான்” என்றார்.

Similar News

News December 1, 2025

விஜய்க்கு அதிர்ச்சி.. மீண்டும் போலீஸை நாடிய தவெக

image

டிச.5-ம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். ஆனால், அதற்கான அனுமதியை இதுவரை பெற முடியாமல் இருப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 முறை மனு அளித்தும் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதுச்சேரி ஐஜி அலுவலகத்தில் அனுமதி கேட்டு புஸ்ஸி ஆனந்த் 3-வது முறையாக மனு அளித்துள்ளார். இன்னும் 4 நாள்களே இருக்கும் நிலையில், அனுமதி கிடைக்குமா?

News December 1, 2025

காலையில் கல்யாணம்.. மாலையில் விவாகரத்து!

image

உ.பி.,யில் சொந்த பந்தங்களின் ஆரவாரத்தில் பூஜா – விஷால் என்ற தம்பதிகளுக்கு நவம்பர் 26-ம் தேதி காலை திருமணம் நடந்துள்ளது. புகுந்த வீட்டுக்கு சென்ற 20 நிமிடத்திலேயே, என்ன காரணம் என கூறாமல் இந்த திருமணம் பிடிக்கவில்லை என பூஜா விடாப்பிடியாக கூறியுள்ளார். ஊராரை கூட்டி, 5 மணி நேரமாக பேசி பார்த்தும் பூஜா மனம் மாறாததால், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் விஷால்.

News December 1, 2025

லோக்சபாவில் 3 மசோதாக்கள் அறிமுகம்

image

வாக்கு திருட்டு மற்றும் SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதால், லோக்சபா இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் நாளை காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மணிப்பூர் ஜிஎஸ்டி 2-வது திருத்த மசோதா, <<18433013>>மத்திய கலால் வரி திருத்த மசோதா<<>> உள்ளிட்ட 3 மசோதாக்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் அறிமுகம் செய்தார்.

error: Content is protected !!