News September 28, 2024
IPL 2025 : போட்டிகளின் எண்ணிக்கை உயருமா?

IPL 2025 தொடரில் போட்டிகளின் எண்ணிக்கை 84ஆக உயர்த்தப்படாது என்று BCCI செயலாளர் ஜெய்ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். 10 அணிகள் இடையிலான IPL கிரிக்கெட்டில் கடந்த சீசனில் மொத்தம் 74 ஆட்டங்கள் நடந்தன. இது 2025இல் 84ஆக மேலும் உயர்த்தப்படலாம் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக பதிலளித்த ஜெய்ஷா, “இந்திய வீரர்களின் பணிச்சுமையை பார்க்க வேண்டியுள்ளது. 84 ஆட்டங்கள் என்பது ஒப்பந்தத்தில் உள்ளது தான்” என்றார்.
Similar News
News November 16, 2025
நாளை 7 மாவட்டங்களில் விடுமுறையா? வந்தது Alert

அடுத்த 5 நாள்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அலர்ட் விடுத்துள்ளது. குறிப்பாக, நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து இன்று இரவு அல்லது நாளை காலை அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News November 16, 2025
மூன்று திசைகளில் பார்வையை பதித்த விஜய்

SIR-க்கு எதிராக தவெக சார்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் 2-ம் கட்ட தலைவர்களை களமிறக்கியுள்ளார் விஜய். தலைநகர் சென்னையில் புஸ்ஸி ஆனந்த், கொங்கு மண்டலமான கோவையில் அருண்ராஜ், தென்மண்டலமான மதுரையில் நிர்மல்குமார் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 2-ம் கட்ட தலைவர்கள் அனைத்து பகுதிகளையும் கவர் செய்யவும், கட்சியினருக்கு நம்பிக்கை அளிக்கவும் விஜய் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.
News November 16, 2025
பிரபல நடிகை மரணம்.. நடிகர் கண்ணீருடன் இரங்கல்

மறைந்த பழம்பெரும் நடிகை <<18284857>>காமினி<<>> குறித்து நடிகர் சாகித் கபூர் எமோஷனலாக பேசியுள்ளார். கபீர் சிங் படத்தில் காமினியுடன் நடித்த அனுபவங்களை நினைவுக்கூர்ந்த சாகித், அவருடன் பணிபுரிந்தது ஒரு பாக்கியம் என கூறியிருக்கிறார். மேலும் காமினி ஒரு அற்புதமான கலைஞராக எப்போதும் நினைவுகூரப்படுவார் எனவும், அவர் மிகவும் கனிவானவர் மற்றும் அன்பானவர் என்றும் சாகித் கபூர் தெரிவித்துள்ளார்.


