News September 29, 2024

IPL 2025: டிமிக்கி கொடுக்கும் வீரர்களுக்கு செக்..!

image

2025 IPL மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், வெளிநாட்டு வீரர்களுக்கான விதிகளை BCCI கடுமையாக்கியுள்ளது. அதன்படி, மெகா ஏலத்தில் பெயரை பதிவு செய்யாத வீரர்கள், இனி மினி ஏலத்தில் பங்கேற்க முடியாது. அதேபோல், ஒரு அணியால் வாங்கப்பட்ட பின், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கடைசி நேரத்தில் தொடரில் இருந்து விலகும் வீரர்களுக்கு அடுத்த 2 IPL தொடர்களில் விளையாட தடை விதிக்கப்படும்.

Similar News

News August 9, 2025

ATM-ல் பணம் போட்டாலும் கட்டணம், எடுத்தாலும் கட்டணம்

image

மாதாந்தர மினிமம் பேலன்ஸை <<17350157>>₹50,000-ஆக<<>> உயர்த்திய ICICI வங்கி, ATM கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. ICICI ATM-களில் முதல் 3 வித்டிராயல் இலவசம். அதன்பின், ஒவ்வொரு முறையும் ₹23 கட்டணம் விதிக்கப்படும். ICICI கிளைகள் & ATM-களில் பணம் டெபாசிட் செய்யவும் முதல் 3 முறை மட்டும் இலவசம். அதன்பின், ஒவ்வொரு முறையும் ₹150 (அ) ஒவ்வொரு ₹1,000-க்கும் ₹3.5 வீதம்- இதில் எது அதிகமோ, அத்தொகை கட்டணமாக விதிக்கப்படும்.

News August 9, 2025

‘மரணம் அமைதியை கொடுக்கட்டும்’.. விபரீத முடிவு

image

‘நான் இந்த உலகத்திற்காக படைக்கப்படவில்லை. இனி என்னால் இங்கு இருக்க முடியாது. வாழ்க்கையில் நான் காணாத அமைதியை மரணம் கொடுக்கட்டும்’. மேற்குவங்க PhD மாணவன் அனாமித்ரா ராய்(25) தற்கொலைக்கு முன் சோஷியல் மீடியாவில் பதிவிட்ட வரிகள் இவை. ராகிங் புகார் குறித்து காலேஜ் நிர்வாகத்திடம் கூறியும் பயனில்லை என்பதால் விபரீத முடிவை கையில் எடுத்துள்ளார். அவரது உடலை மீட்ட போலீஸ் விசாரித்து வருகிறது. SO SAD.

News August 9, 2025

BREAKING: தமிழ்நாட்டில் இந்த கட்சிகளுக்கு தடை

image

தமிழகத்தில் 22 அரசியல் கட்சிகள் உள்பட நாடு முழுவதும் 334 கட்சிகளை நீக்கி EC அறிவித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத கட்சிகளை கண்டறிந்து அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. அதன்படி, காமராஜர் மக்கள் கட்சி, மக்கள் நீதி கட்சி, அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சி, மீனவர் மக்கள் முன்னணி உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன. வேறு எந்த கட்சிகளை நீக்க வேண்டுமென நினைக்கிறீங்க?

error: Content is protected !!