News April 14, 2024
IPL 2024: அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் 3 வீரர்கள்

IPLஇல் இதுவரை நடந்த போட்டிகள் அடிப்படையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்களை பிசிசிஐ பட்டியலிட்டுள்ளது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யுவேந்திர சாஹல் 11 விக்கெட்டுகளுடன் (6 போட்டி) முதலிடத்தில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா 10 விக்கெட்டுகளுடன் (5 போட்டி) 2ஆவது இடத்திலும், சென்னை வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் 9 விக்கெட்டுகளுடன் (4 போட்டி) 3வது இடத்திலும் உள்ளனர்.
Similar News
News November 25, 2025
சுபமுகூர்த்தம்.. பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு

கார்த்திகை மாத சுபமுகூர்த்த தினமான நவ.27-ம் தேதி சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகத்தில் 100-க்கு பதில் 150 டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகத்தில் 200-க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படவுள்ளது. மேலும் அதிகளவு ஆவணப் பதிவுகள் நடக்கும் அலுவலகங்களில் 150 டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
News November 25, 2025
தவெகவில் செங்கோட்டையன்? நீடிக்கும் சஸ்பென்ஸ்!

<<18380211>>Ex அமைச்சர் செங்கோட்டையன்<<>> தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படும் செய்திதான் TN அரசியலில் 2 நாள்களாக பேசுபொருளாகியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்க WAY2NEWS, செங்கோட்டையன் தரப்பினரை தொடர்பு கொண்டபோது அவர்கள் இந்த தகவலை மறுக்கவில்லை. பின்னர் பேசுகிறோம் என்றனர். செய்தியாளர்களிடம் பேசிய CTR நிர்மல்குமாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, அவரும், இது பற்றி பின்னர் பேசுகிறோம் என சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
News November 25, 2025
டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் ரூல்ஸ் மாறியது

நீலகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமலில் உள்ளது. இதனை TN முழுவதும் நவ.30-க்குள் அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, திருச்சியில் இன்றுமுதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பிற மாவட்டங்களிலும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்மூலம், விற்பனை விலையுடன் கூடுதலாக ₹10 கொடுத்து மது வாங்க வேண்டும். காலி பாட்டிலை ஒப்படைத்து அதனை பெற்றுக் கொள்ளலாம்.


