News April 14, 2025

இந்தியாவில் அதிகரிக்கும் ஐபோன் உற்பத்தி..!

image

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களின் உற்பத்தி 60% அதிகரித்துள்ளது. மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த 2024- 25 நிதியாண்டில் ஐபோன் விற்றுமுதல் (Turnover) ₹1.89 லட்சம் கோடியை தொட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பிரிவில் ஐபோன்கள் மட்டும் ₹1.5 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் பாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்திய அளவில் முன்னணியில் உள்ளது.

Similar News

News November 28, 2025

அரியலூர் மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது அரியலூர் மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் நாளை (நவ.29) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 28, 2025

நடிகர் தர்மேந்திரா மறைவு: ஹேமமாலினி உருக்கம் (PHOTOS)

image

நீங்கள் விட்டு சென்ற இடம் எப்போதும் வெற்றிடமாகவே இருக்கும் என நடிகை ஹேமமாலினி, கணவர் தர்மேந்திராவின் மறைவால் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே ஹேமமாலினியை தர்மேந்திரா 2-வது திருமணம் செய்ததால், அது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது நீங்காத நினைவுகளாக இருக்கும் போட்டோக்களை X தளத்தில் ‘Some memorable moments’ என உருக்கமாக தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.

News November 28, 2025

நெருங்கும் டிட்வா புயல்: வார் ரூமில் CM ஸ்டாலின்!

image

டிட்வா புயலால் <<18411226>>5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்<<>> விடுக்கப்பட்டுள்ள நிலையில், வார் ரூமில் CM ஸ்டாலின் ஆய்வு செய்தார். கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்ட CM, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து பேட்டியளித்த அவர், போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மழையில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான பணிகளை செய்ய ஆணையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!