News March 4, 2025

IOB வங்கியில் வேலை: டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) 750 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மார்ச்.09க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஊக்கத்தொகையாக ரூ.15,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

Similar News

News November 7, 2025

கோவையில் கோடி கணக்கில் மோசடி

image

காரமடையை சேர்ந்த விஜயா நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவரின் நிறுவனத்தில் மேனேஜராக கார்த்திகேயன், கலெக்சன் ஏஜென்டாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீகுமார், அருண்குமார் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் மக்களிடம் இருந்து வசூல் செய்த ரூ.1.41 கோடி பணத்தை நிறுவனத்திற்கு செலுத்தாமல் 3 பேரும் மோசடி செய்ததாக கோவை குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில் கார்த்திகேயன், ஸ்ரீகுமாரை நேற்று கைது செய்தனர்.

News November 7, 2025

கோவை: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். (SHARE)

News November 7, 2025

கோயம்புத்தூர்: யூடியூபருக்கு சிறை

image

முன்னாள் தவெக நிர்வாகி வைஷ்ணவி அண்மையில் Ex.அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார். அவர் கரூர் சம்பவம் குறித்து ஏஐ மூலம் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு விஜய் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் கார்த்திக் என்பவர் வைஷ்ணவிக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்தார். இந்நிலையில், கோவை சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!