News March 4, 2025
IOB வங்கியில் வேலை: டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) 750 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மார்ச்.09க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஊக்கத்தொகையாக ரூ.15,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News December 6, 2025
தபால் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை தபால் பிரிவின் அரையாண்டு ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் (டிசம்பர் 30) அன்று காலை 11 மணிக்கு கோவை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஓய்வூதிய குறைகள் உள்ளோர் மனுக்களை (டிசம்பர் 20)-க்குள் சீனியர் சூப்பிரண்டு, கோவை – 641001 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 6, 2025
ஒட்டர்பாளையம் ஊராட்சிக்கு விருது

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தாயுமானவர் திட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னூர் ஒட்டர்பாளையம் ஊராட்சிக்கு சமூக நல்லிணக்க கிராம ஊராட்சி விருது மற்றும் ரூ.1 கோடி வளர்ச்சி பணிகளுக்கான நிதியினை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரியிடம் இன்று வழங்கினார்.
News December 6, 2025
கோவை அருகே சோக சம்பவம்!

கோவை இடிகரையை சேர்ந்த கட்டிட தொழிலாளி மஞ்சேஷ்(42), ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் தனியார் வங்கியில் ரூ.80,000 கடன் பெற்றுள்ளார். சில தினங்களுக்கு முன் மஞ்சேஷ் வேலைக்கு சென்ற நேரத்தில், அப்பெண் பணத்தை எடுத்து கொண்டு முதல் கணவருடன் ஓடியுள்ளார். மனமுடைந்த மஞ்சேஷ் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


