News April 24, 2025
வெளிநாட்டு தூதர்களுக்கு அழைப்பு.. முக்கிய ஆலோசனை

இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளிநாட்டு தூதர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக உள்ள பாகிஸ்தான் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்ட உள்ளது. மேலும் இந்தியாவின் முடிவிற்கு மற்ற நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் வைக்க உள்ளார்.
Similar News
News November 28, 2025
ஆட்சிப் பீடத்தில் விஜய் அமர்வது உறுதி: செங்கோட்டையன்

2026 தேர்தலில் தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும், ஆட்சிப் பீடத்தில் விஜய் அமர்வது உறுதி எனவும் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அதிமுகவில் அதிருப்தியில் உள்ள மேலும் சிலர் தவெகவில் இணைய உள்ளதாக பரவும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, விரைவில் அதற்கான விடை கிடைக்கும் என சூசகமாக பதில் அளித்துள்ளார்.
News November 28, 2025
டிரம்ப் செயலால் 19 நாடுகளுக்கு வந்த புதிய சிக்கல்

வெள்ளை மாளிகை அருகே நடந்த <<18400484>>துப்பாக்கிச்சூட்டை<<>> தொடர்ந்து, ஆப்கானியர்களின் <<18401691>>குடியேற்றத்துக்கு <<>>டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பர்மா, ஈரான், ஹைட்டி, சோமாலியா, சூடான், யேமன், கியூபா உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து வந்தவர்களின் கிரீன் கார்டுகளை முழுமையாக பரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, காயமடைந்த வீரர்களில் ஒருவர் உயிரிழந்ததாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
News November 28, 2025
WPL: அதிக விலைக்கு ஏலம் போன டாப் 7 வீராங்கனைகள்!

நேற்று நடைபெற்று முடிந்த WPL ஏலத்தில் அணிகள் பணத்தை கொட்டி வீராங்கனைகளை வாங்கியுள்ளன. ₹50 லட்சம் அடிப்படை விலை கொண்ட ஒரு வீராங்கனை ₹3.20 கோடிக்கு ஏலம் போனது தான் இன்று ஹாட்டாபிக். இது மட்டுமின்றி, இந்த ஏலத்தின் டாப் 7 ஒப்பந்தங்களை கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். WPL தொடரில் உங்களின் ஃபேவரிட் வீராங்கனை யார்?


