News April 24, 2025

வெளிநாட்டு தூதர்களுக்கு அழைப்பு.. முக்கிய ஆலோசனை

image

இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளிநாட்டு தூதர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக உள்ள பாகிஸ்தான் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்ட உள்ளது. மேலும் இந்தியாவின் முடிவிற்கு மற்ற நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் வைக்க உள்ளார்.

Similar News

News October 22, 2025

நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

image

கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போதும் பல மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது. மேலும், இன்றிரவு 10 மணி வரை <<18075508>>சென்னை உள்பட 29 மாவட்டங்களில்<<>> மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மழைப்பொழிவை பொருத்து மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பை வெளியிட உள்ளது.

News October 22, 2025

RJD vs காங்கிரஸ்: தொகுதி பங்கீட்டில் தொடரும் இழுபறி

image

பிஹாரில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக RJD, காங்கிரஸ் இடையே இழுபறி நீடிப்பதால், கூட்டணிக்குள் பதற்றம் நிலவுகிறது. இதை சரிசெய்ய காங்., கட்சியின் முக்கிய தலைவர்கள் பிஹாரில் முகாமிட்டு, தேஜஸ்வி யாதவ்வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் காங்., EX CM அசோக் கெலாட், 5 – 10 தொகுதிகளில் நட்பு ரீதியான சண்டை நீடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

News October 22, 2025

‘அம்மா SORRY.. நான் சாகப்போறேன்’

image

‘அம்மா நான் தப்பு பண்ணிட்டேன். SORRY. எனது சாவுக்கு சக்திவேல், முத்துராஜ், முருகேசன்தான் காரணம்’. தென்காசியில் தற்கொலை செய்த இளம்பெண்(26) எழுதிய வரிகள் இவை. சக்திவேலுக்கும் அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை வைத்து பெண்ணிடம் பணம் பறித்த சக்திவேல், அவரது அந்தரங்க வீடியோவை லீக் செய்துள்ளார். இதனால், பெண் உயிரை மாய்த்துக் கொள்ள, நண்பர்கள் 2 பேருடன் சேர்த்து சக்திவேல் கம்பி எண்ணுகிறார்.

error: Content is protected !!