News August 30, 2024
பூலித்தேவர் பிறந்தநாள் விழாவிற்கு அழைப்பு

நெல்லை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கணேசராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் அம்பை MLA இசக்கி சுப்பையா ஆகியோர் இன்று(ஆக.,30) வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் செப்.,1 ஆம் தேதி பூலித்தேவரின் 309 ஆவது பிறந்தநாள் விழா நெற்கட்டான் செவல் நினைவிடத்தில் கொண்டாடப்படுகிறது. இதில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
Similar News
News September 9, 2025
துணை ஜனாதிபதிக்கு நயினார் வாழ்த்து

பாஜக மாநில தலைவர் நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இன்று வெளியிட்ட அறிக்கையில், துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று 15ஆவது குடியரசுத் துணைத் தலைவராக விரைவில் பதவியேற்று மாநிலங்களவையை வழிநடத்த இருக்கும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பைத் தமிழர் அலங்கரிக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.
News September 9, 2025
நெல்லையில் ஆங்காங்கே பிச்சை எடுக்கும் சிறுவர் சிறுமிகள்

நெல்லை மாநகர பகுதியில் சமீபகாலமாக சிறுவர், சிறுமிகள் ஆங்காங்கே பிச்சை எடுக்கும் அவலம் அதிகரித்துள்ளது. எனவே இந்த சிறுவர்கள் குறித்தான விவரங்களை சேகரித்து இவர்களை கல்வி பயில மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இதனை விரைந்து தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
News September 9, 2025
காணொளியில் மாவட்ட செயலாளர் கலந்துரையாடல்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று (செப்.9) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் இரா. ஆவுடையப்பன் திருநெல்வேலி திமுக மாவட்ட அலுவலகத்தில் வைத்து காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார்.