News March 28, 2024

₹3 லட்சம் கோடியை ஈட்டிய முதலீட்டாளர்கள்!

image

2023-24ஆம் நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்ந்து 73,635 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 219 புள்ளிகள் உயர்ந்து 22,343 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இதனால் முதலீட்டாளர்கள் வசமுள்ள பங்குகளின் மதிப்பு, ஒரே நாளில் ₹3 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது.

Similar News

News August 26, 2025

பெண் ரூபத்தில் விநாயகர் காட்சி தரும் கோயில்!

image

முழுமுதற் கடவுளான விநாயகர் பெண் ரூபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் என்ற ஊரில் அமைந்துள்ள, தாணுமாலயன் கோயிலில் காட்சி தருகிறார். இக்கோயிலின் ஒரு தூணில் பெண் வடிவில் இருக்கும் பிள்ளையாருக்கு விநாயகி, கணேஷ்வரி, விக்னேஷ்வரி என பல்வேறு பெயர்கள் உள்ளன. பெண் அணிகின்ற ஆபரணங்களோடு ஒரு காலை ஊன்றி, மறுகாலை மடக்கி, புடவையில் பெண் தெய்வமாக விநாயகர் காட்சி தருகிறார். SHARE IT.

News August 26, 2025

தவெக கூட்டணி.. விஜய்யின் மாஸ்டர் பிளான் வெளியானது

image

1967, 1977-ம் ஆண்டு போல் TN தேர்தல் வரலாறு மாறும் என விஜய் பேசி வருவதற்கு பின்னால், மாபெரும் மாஸ்டர் பிளான் இருப்பது தெரியவந்துள்ளது. DMK, ADMK கூட்டணி ஆட்சிக்கு பிடி கொடுக்காமல் உள்ளன. இதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சியில் பங்கு என்ற தாரக மந்திரத்தை கையில் எடுத்துள்ளார் விஜய். கூட்டணி ஆட்சி என்ற கருத்தை கூறி வரும் காங்கிரஸ், PMK, DMDK உள்ளிட்ட கட்சிகளை TVK ஒருங்கிணைக்க முயல்கிறதாம்.

News August 26, 2025

டிரம்ப்புக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த மோடி

image

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் 50% வரிவிதிப்பை மறைமுகமாக குறிப்பிட்ட PM மோடி, எவ்வளவு அழுத்தம் வந்தாலும், சிறு தொழில்முனைவோர்கள், விவசாயிகளுக்கு தீங்கு ஏற்பட விடமாட்டோம் என மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் பேசிய அவர் உலகில், அனைவரும் பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்டு அரசியல் செய்வதில் மும்முரமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!