News September 8, 2025

ஓசூரில் விரைவில் முதலீட்டாளர்கள் மாநாடு: CM

image

தமிழ்நாடு கொண்டுள்ள மனித வளம் குறித்து, தானே எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகதான் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வதாக CM ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இதன் விளைவாக, தமிழ்நாட்டின் மீது நம்பிக்கை வைத்து ஜெர்மனியின் 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன என தெரிவித்தார். மேலும், தூத்துக்குடியில் நடத்தியது போல ஒசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Similar News

News September 8, 2025

அடுத்த கிரகணம் எப்போது தெரியுமா?

image

நேற்றிரவு, முழு சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில், அடுத்த 2 வாரத்திற்குள் மற்றுமொரு கிரகணம் நிகழவுள்ளது. இந்த மாதம் 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று சூரிய கிரகணம் நிகழவுள்ளது. சரியாக 21-ம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்கி, 22-ம் தேதி அதிகாலை 3.23 மணி வரை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதனை இந்தியாவில் காணமுடியாது. நியூசிலாந்து & ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தெளிவாகக் தெரியும்.

News September 8, 2025

வைகோவின் போலி நாடகம்: மல்லை சத்யா கடும் தாக்கு

image

ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் ஆலோசித்து மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கப்படுவதாக அறிவித்திருந்தார் வைகோ. இதற்கு, ஒழுங்கு நடவடிக்கை குழு என ஒன்று இல்லாத போது, எந்த குழுவை வைத்து இந்த நடவடிக்கையை வைகோ எடுத்துள்ளார் என சத்யா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தன்னை நீக்கும் தீர்ப்பை முன்கூட்டியே எழுதிய வைகோ போலியான விசாரணை நாடகம் நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

News September 8, 2025

வங்கி கடன் வாங்கியோருக்கு HAPPY NEWS

image

ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைக்க RBI திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் GST மறுசீரமைப்பு செய்திருந்தாலும், மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு முன்பே, 5.25% ஆக உள்ள ரெப்போ வட்டி விகிதம் 5% ஆக குறைக்க உள்ளதாம். இதனால், தனிநபர், வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி காத்திருக்கிறது.

error: Content is protected !!