News April 13, 2024
முதலீட்டாளர்களே கவனமாக இருங்கள்

கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டிற்கான முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், அடுத்த வாரம் மொத்தம் 63 நிறுவனங்களின் முடிவுகள் வெளியாகவுள்ளன. குறிப்பாக பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அலோக் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ, எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் முடிவுகள் வெளியாகிறது. முடிவுகளை பொருத்து அந்நிறுவன பங்குகளின் விலையில் தாக்கம் ஏற்படலாம்.
Similar News
News November 18, 2025
வியட்நாமில் பஸ் மீது விழுந்த பாறையால் 6 பேர் பலி

வியட்நாமில் பெய்து வரும் கனமழையால் ஒருசில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்படி ஹோ சி மின் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் அவ்வழியாக சென்ற பஸ்சின் மீது பாறைகள் விழுந்ததால், அதன் முன்பகுதி நசுங்கியது. கடும் சிரமத்துக்கு பின் பஸ்சில் சிக்கியிருந்த 32 பயணிகளை மீட்புப்படையினர் போராடி மீண்டனர். இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
News November 18, 2025
வியட்நாமில் பஸ் மீது விழுந்த பாறையால் 6 பேர் பலி

வியட்நாமில் பெய்து வரும் கனமழையால் ஒருசில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்படி ஹோ சி மின் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் அவ்வழியாக சென்ற பஸ்சின் மீது பாறைகள் விழுந்ததால், அதன் முன்பகுதி நசுங்கியது. கடும் சிரமத்துக்கு பின் பஸ்சில் சிக்கியிருந்த 32 பயணிகளை மீட்புப்படையினர் போராடி மீண்டனர். இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
News November 18, 2025
NATIONAL 360°: சிறுத்தை தாக்குதலை தடுக்க AI ட்ரோன்

*கர்நாடகா CM சித்தராமையாவின் மனைவி சுவாசப் பிரச்சினையால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். *சிறுத்தை தாக்குதல்களைத் தடுக்க, கண்காணிப்புக்கு AI ட்ரோன்களைப் பயன்படுத்த மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. *டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த அண்டை மாநில அரசுகளின் உதவியை CM ரேகா குப்தா நாடியுள்ளார். *அசாமில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய ECI முடிவு செய்துள்ளது.


