News April 13, 2024

முதலீட்டாளர்களே கவனமாக இருங்கள்

image

கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டிற்கான முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், அடுத்த வாரம் மொத்தம் 63 நிறுவனங்களின் முடிவுகள் வெளியாகவுள்ளன. குறிப்பாக பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அலோக் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ, எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் முடிவுகள் வெளியாகிறது. முடிவுகளை பொருத்து அந்நிறுவன பங்குகளின் விலையில் தாக்கம் ஏற்படலாம்.

Similar News

News November 15, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 520 ▶குறள்: நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. ▶பொருள்: மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

News November 15, 2025

பிஹார் தாக்கம்: பங்குச்சந்தை நிலவரம் என்ன?

image

பிஹார் வாக்கு எண்ணிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள், வார இறுதிநாளான நேற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. இருப்பினும், வர்த்தக நேர முடிவில் சற்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.11 புள்ளிகள் உயர்ந்து 84563 புள்ளிகளுடன் நிறைவு செய்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 31 புள்ளிகள் உயர்ந்து 25,910 புள்ளிகளுடன் நிறைவு செய்தது.

News November 15, 2025

தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம்: கார்கே

image

பிஹார் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக CONG தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இந்த தோல்வியை கண்டு CONG தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம். தைரியம், அர்ப்பணிப்புடன் நீண்ட கால போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தங்களுக்கு வாக்களித்த பிஹார் மக்களுக்கு இதயபூர்வமான நன்றி, ஜனநாயகத்தை காப்பதற்கான தங்களது பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!