News September 14, 2024
சீன நிறுவனங்களில் முதலீடு: காங்கிரஸ்

SEBI தலைவர் மாதபி புரி புச் சீன நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக காங்கிரஸ் புது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. விதிகளை மீறி முறைகேடாக வருமானம் ஈட்டியதாக முன்பு குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு வெளியே பல நாடுகளில் அதிகளவு முதலீடு செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து பிரதமருக்கு தெரியுமா என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
Similar News
News January 5, 2026
பொங்கல் பரிசு தொகுப்பு.. CM ரங்கசாமி வழங்கினார்

புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 4 கிலோ பச்சரிசி, 1 கிலோ நாட்டு சர்க்கரை, 1 கிலோ பருப்பு உள்பட தலா ₹750 மதிப்புள்ள பொருள்களை மக்களுக்கு வழங்கி, CM ரங்கசாமி திட்டத்தை தொடங்கி வைத்தார். அங்கு ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. TN-ல் ₹3,000 ரொக்கத்துடன் பச்சரிசி உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் தொகுப்பு விநியோகத்தை ஜன.8-ல் CM ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
News January 5, 2026
தவாகவில் இருந்து தவெகவுக்கு தாவுகிறார்!

தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருந்து வெளியேறிய ஜெகதீச பாண்டியன் தவெகவில் இணையவுள்ளார். நாதகவில் இருந்து வெளியேறி தவாகவில் இணைந்த இவர், சீமானை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் தமிழ் தேசியம் பேசுவதால் சீமானை நண்பனாக கருதும் வேல்முருகனுக்கு இது பிடிக்காததால், விமர்சிக்க வேண்டாம் என ஜெகதீசனுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு அவர் உடன்பட மறுத்து இந்த முடிவை எடுத்துள்ளார்.
News January 5, 2026
KKR-க்காக ₹4,000 கோடி செலவழிக்கும் ஷாருக்!

KKR அணியை கிட்டத்தட்ட முழுமையாக கைப்பற்றும் எண்ணத்தில், ஷாருக்கான் சுமார் ₹4,000 கோடி செலவழிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. KKR அணி உரிமத்தில் தற்போது, ஷாருக்கிடம் 55% பங்குகளும், மெஹ்தா குரூப்பிடம் 45% பங்குகளும் உள்ளன. மெஹ்தா குரூப்பிடம் இருந்து 35% பங்குகளை சுமார் ₹4,000 கோடியை கொடுத்து ஷாருக்கான் வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், அணியின் உரிமத்தில் அவரின் பங்குகள் 90% ஆக அதிகரிக்கும்.


