News June 27, 2024
Byju’s நிறுவனத்தின் மீது விசாரணை தொடர்கிறது

Byju’s நிறுவனம் ₹28,000 கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகளை பெற்றிருப்பது தெரியவந்ததால், அந்நிய செலாவணி விதிகளை மீறியதாக, அந்த நிறுவனத்தின் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழலில், நிதிமோசடி விவகாரத்தில் Byju’s அரசால் விடுவிக்கப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் இச்செய்தி தவறானது என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 11, 2025
நவ.14 அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தின விழா!

TN-ல் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நவ.14-ம் தேதி குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகள் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Ex PM ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் நவ.14-ஐ மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றன. அந்த வகையில், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும், சமூக முன்னேற்ற உறுதிமொழி எடுக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 11, 2025
ஷ்ரேயஸ் ஐயருக்கு பதில் யார்?

SA அணிக்கு இந்தியாவில் 5 T20, 3 ODI, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ODI தொடர் வரும் நவ. 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் விளையாட மாட்டார் என கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. தற்போது அவருக்கு பதில், 4-வது விக்கெட்டாக யார் சரியான சாய்ஸாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. திலக் வர்மாவை Replacement-ஆக களமிறக்கலாம் என கருத்துக்கள் எழுந்துள்ளது. யாரு கரெக்ட் சாய்ஸ்?
News November 11, 2025
3 மாதங்களாக செல்போன் ரீசார்ஜ் பண்ணலயா.. உஷார்!

3 மாதங்கள் ரீசார்ஜ் செய்யாவிட்டால், அந்த நம்பரை Recycle என்ற முறையில், Airtel புதிதாக நம்பர் வாங்குபவர்களுக்கு கொடுத்துவிடும் வாய்ப்புகள் அதிகம். அப்படி வாங்கிய புதிய நம்பரில், முன்னர் அதை முன்னர் பயன்படுத்தியவரின் Facebook, Uber, Swiggy போன்ற அக்கவுண்டுகளில் தானாகவே Log-in செய்ய முடிவதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். இது மட்டுமின்றி ஆதார், UPI அக்கவுண்டுகளின் தகவல்களும் திருடு போகும் அபாயம் உள்ளது.


