News June 27, 2024

Byju’s நிறுவனத்தின் மீது விசாரணை தொடர்கிறது

image

Byju’s நிறுவனம் ₹28,000 கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகளை பெற்றிருப்பது தெரியவந்ததால், அந்நிய செலாவணி விதிகளை மீறியதாக, அந்த நிறுவனத்தின் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழலில், நிதிமோசடி விவகாரத்தில் Byju’s அரசால் விடுவிக்கப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் இச்செய்தி தவறானது என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 1, 2026

தூத்துக்குடி: பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

தூத்துக்குடி மக்களே, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE பண்ணுங்க

News March 1, 2026

‘வாய் கிழிய பேசுவதை தவிர திமுக ஒன்றுமே செய்யவில்லை’

image

தமிழ்நாட்டை திமுக அரசு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது என PM மோடி கூறியுள்ளார். பணம்தான் நமக்கு, பிரச்னை மக்களுக்கு என்பதே அவர்களின் எண்ணம் என்ற அவர், திமுக ஏழைகளுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார். மேலும், தமிழ்நாட்டு உரிமைகளை பற்றி வாய் கிழிய திமுக பேசுவதாகவும், பேச்சை தவிர திமுக ஒன்றுமே செய்ததில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.

News March 1, 2026

World War 3.. அன்றே கணித்தாரா பாபா வங்கா?

image

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் உலக பேமஸ். இவர், 2026-ல் 3-ம் உலகப் போர் உருவாகலாம், அதில் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு முக்கியத் தொடர்பு இருக்கும் என கணித்திருந்தார். தற்போது இஸ்ரேல் – ஈரான் போர் நடந்து, மத்திய கிழக்கு நாடுகள் பதற்றத்தில் இருப்பதால், அவரது கணிப்பு உண்மையாகி வருவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?

error: Content is protected !!