News March 18, 2024
அவசர வழக்காக விசாரணை

பொன்முடி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்க முதல்வர் பரிந்துரை செய்திருந்த நிலையில், அதற்கு ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திமுக, இதை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தது.
Similar News
News November 25, 2025
அடுத்தடுத்து விக்கெட்.. இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின், 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஜெய்ஸ்வால் 13 ரன்களிலும், ராகுல் 6 ரன்களில் அடுத்தடுத்த அவுட்டாகி வெளியேறினர். தற்போது இந்திய அணி 21/2 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. சாய் சுதர்சன், குல்தீப் யாதவ் தற்போது களத்தில் உள்ளனர். இன்னும் வெற்றி பெற 528 ரன்கள் தேவை.
News November 25, 2025
வங்கி கடன் EMI குறைகிறது

வங்கிகளில் லோன் வாங்கியோருக்கு மகிழ்ச்சியான செய்தியை RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார். டிசம்பரில் ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 6%-ஆக இருந்த ரெப்போ, கடந்த ஜூனில் 5.5%ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் 0.5% குறையும் என பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர். இதனால், வீடு, வாகன, தனி நபர் உள்ளிட்ட கடன்களுக்கான EMI தொகை குறைய வாய்ப்புள்ளது. SHARE IT
News November 25, 2025
ஜப்பானில் நிலநடுக்கம்!

ஜப்பானின் கியூஷூ பிராந்தியத்தில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், 10 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு தான் ஜப்பான் அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே தற்போது மீண்டும் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


