News March 18, 2024

அவசர வழக்காக விசாரணை

image

பொன்முடி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்க முதல்வர் பரிந்துரை செய்திருந்த நிலையில், அதற்கு ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திமுக, இதை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தது.

Similar News

News November 17, 2025

₹10,000 லஞ்சம் கொடுத்து வென்ற BJP: செல்வப்பெருந்தகை

image

பிஹார் தேர்தலில் காங்., தோல்வி அடையவில்லை, ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். பிஹாரில் உள்ள 1.21 கோடி பெண்களுக்கு தலா ₹10,000 கொடுத்து பாஜக வென்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழக மக்களின் GST பணத்தை பாஜக பிஹாரில் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இத்தேர்தலில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., 6-ல் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

News November 17, 2025

சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

image

தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரும் 15-ம் தேதியுடன் முடிவடைந்திருந்தது. ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காலக்கெடு, 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த வாய்ப்பை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News November 17, 2025

அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. முடிவை அறிவித்தார்

image

2026-ல் திமுகவை வீழ்த்த தவெகவுடன் கூட்டணி வைக்க இபிஎஸ் தொடர்ந்து முயற்சித்து வருவதாக பலரும் கூறி வந்தனர். இந்நிலையில், அதிமுக – பாஜக உடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்று நிர்மல்குமார் திட்டவட்டமாக கூறி, கூட்டணி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இதனால் விஜய் தலைமையிலான கூட்டணியில் EPS-க்கு எதிராக அரசியல் செய்யும் டிடிவி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!