News March 18, 2024
அவசர வழக்காக விசாரணை

பொன்முடி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்க முதல்வர் பரிந்துரை செய்திருந்த நிலையில், அதற்கு ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திமுக, இதை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தது.
Similar News
News December 16, 2025
100 நாள் வேலை.. NDA-க்குள் கிளம்பிய எதிர்ப்பு குரல்

<<18573575>>100 நாள் வேலைத்திட்டத்திற்கு<<>> பதிலாக, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட VB-G RAM G மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்நிலையில், இதற்கு NDA கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய மசோதாவால், மாநிலங்களுக்கு அதிக நிதி சுமை ஏற்படும், நிதிப் பற்றாக்குறை அதிகம் உள்ள ஆந்திராவிற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கவலை தெரிவித்துள்ளது.
News December 16, 2025
10-வது படித்தால் போதும்.. ₹21,000 சம்பளத்தில் வேலை!

✱BSF, CISF, CRPF, ITBP உள்ளிட்ட படைப் பிரிவுகளில் உள்ள 25,487 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✱கல்வித்தகுதி: 10- வது தேர்ச்சி ✱வயது: 18 – 23 ✱தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்படும் ✱சம்பளம்: ₹21,700 – ₹69,100 ✱விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.31 ✱விண்ணப்பிக்க <
News December 16, 2025
CSK-வில் இணைந்த அகீல் ஹோசைன்

IPL மினி ஏலத்தில், WI ஆல்-ரவுண்டர் அகீல் ஹோசனை ₹2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. ஜடேஜாவின் இடத்தை நிரப்புவதற்கு ஒரு சிறந்த ஆல்-ரவுண்டரை தேடிய CSK, தற்போது அகீல் ஹோசனை அவரது அடிப்படை ஏலத்தொகைக்கு பெற்றுள்ளது. முன்னதாக, ரவி பிஷ்னோயையும் வாங்க CSK முனைப்பு காட்டியது. ஆனால் ₹5 கோடிக்கு பிறகு, ஏலம் கேட்பதை நிறுத்திக்கொண்டது. CSK-வின் இந்த தேர்வு சரியானதா? கமெண்டல சொல்லுங்க


