News March 18, 2024

அவசர வழக்காக விசாரணை

image

பொன்முடி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்க முதல்வர் பரிந்துரை செய்திருந்த நிலையில், அதற்கு ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திமுக, இதை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தது.

Similar News

News December 6, 2025

சிக்கலில் திமுக அமைச்சர்கள்?

image

K.N.நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை முறைகேடு வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இதை மீண்டும் தூசிதட்ட முடிவு எடுத்துள்ளதாம் ED. அத்துடன், செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், MP கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீதான வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, இம்மாத இறுதிக்குள் சில சீனியர் அமைச்சர்களைக் குறிவைத்து ரெய்டு நடக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

News December 6, 2025

விஜய் உடன் கைகோர்க்கிறார் பிரபல நடிகர்

image

அரசியலில் நுழைந்ததால் ‘ஜனநாயகன்’ தான் கடைசி படம் என விஜய் அறிவித்துவிட்டார். இதனால், ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்க்கு farewell கொடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக, இவ்விழாவில் பங்கேற்க ரஜினி, கமல், அஜித், எஸ்கே, தனுஷ், சிம்பு உள்ளிட்ட நட்சத்திரங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். இதில், ஒரே மேடையில் விஜய்யுடன் கைகோர்க்க முதல் ஆளாக தனுஷ் ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

News December 6, 2025

Elon Musk-க்கு ₹1250 கோடி அபராதம்: முடக்கப்படுகிறதா X?

image

ஐரோப்பிய யூனியனின் புதிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை (DSA) பின்பற்றாததால், எலான் மஸ்கின் X நிறுவனத்திற்கு சுமார் ₹1259 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. X நிறுவனம் மக்களை ஏமாற்றும் விதமாக Blue Tick-ஐ வடிவமைத்துள்ளதாக EU குற்றஞ்சாட்டியது. இதை மஸ்க் கடுமையாக விமர்சித்ததோடு, விதிமுறைகளையும் பின்பற்றவில்லை. இந்த அபராதத்தை கட்டவில்லை எனில் ஐரோப்பிய நாடுகளில் ‘X’ முடங்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!