News March 18, 2024
அவசர வழக்காக விசாரணை

பொன்முடி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்க முதல்வர் பரிந்துரை செய்திருந்த நிலையில், அதற்கு ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திமுக, இதை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தது.
Similar News
News November 25, 2025
கவர்ச்சி என்பது அவரவர் விருப்பம்: ரகுல் ப்ரீத் சிங்

நடிகைகளின் பயணத்தில் திருமணம் என்பது தடைக்கல் அல்ல, அது ஒரு ஊக்கம் தரும் ஏணிப்படிகளே என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். அத்துடன், தன்னை பொறுத்தவரை கவர்ச்சி என்பது அவரவர் விருப்பம், அந்த எல்லைகளை திருமணம் தடுக்கவோ குறைக்கவோ முடியாது என்றும் கூறினார். திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியாக நடித்து வருவது குறித்த கேள்விக்கு ரகுல் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
News November 25, 2025
உதயநிதி ஒரு இந்து விரோத சக்தி: H ராஜா

திராவிட மாடல் அரசு என்றாலே திருட்டு, இருட்டு, புரட்டு, உருட்டு என்றே அர்த்தம் என H ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களில் திமுக அரசு சொல்வது அனைத்தும் முழு பொய் என்று சாடிய அவர், திமுகவை தான் நம்பவே மாட்டேன் என்றும் கூறினார். SIR பணிகளால் எந்த ஊழியரும் மன உளைச்சலில் இறக்கவில்லை என்றார். மேலும், உதயநிதி ஒரு இந்து விரோத சக்தி என்றும் அவர் குறிப்பிட்டார்.
News November 25, 2025
கனமழை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

நாளை புயல் உருவாகவுள்ள நிலையில், தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு விடுமுறை இல்லாவிடில், குடை, ரெயின் கோட் ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள் மாணவர்களே..


