News April 10, 2024

துபாய் கோயிலில் முன்பதிவு முறை அறிமுகம்

image

துபாயில் புதிதாக கட்டியுள்ள கோயிலில், பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருவதால் முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி திறந்து வைத்த இந்தக் கோயிலில் மார்ச் 1 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போதிலிருந்து கூட்டம் அதிகரித்து வருவதால், அதனை தவிர்க்க https://www.mandir.ae/visit என்ற இணையதளம் மூலம் தரிசன நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 13, 2025

விதவிதமாக நிறங்களில் கண்கள் – ஸ்வைப் பண்ணுங்க

image

உலகில் மனிதர்கள் பல விதம் என்பதுபோல, கண்களின் நிறங்களும் பல விதமான வண்ணங்களில் காணப்படுகின்றன. பெரும்பாலான மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட வண்ணத்திலும், அரிதாக சிலருக்கு மட்டுமே பிற வண்ணங்களில் உள்ளன. என்னென்ன வண்ணங்களில் கண்கள் உள்ளன, அவை எத்தனை சதவீத மக்களுக்கு உள்ளன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 13, 2025

₹397 கோடி ஊழல்.. திமுக அரசு மீது அறப்போர் புகார்

image

₹397 கோடி ஊழலின் முக்கிய புள்ளிக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. தலைமை நிதி கட்டுப்பாட்டாளராக (CFC) பதவி உயர்வு பெற்றுள்ள காசி , டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து செய்த செட்டிங் காரணமாக சந்தை விலையை விட 40% அதிகமாக டெண்டர் ஆணை வழங்கப்பட்டதாக புகாரளித்துள்ளது. இது திமுக ஊழல் மாடலின் மற்றொரு சாதனை என்றும் அறப்போர் சாடியுள்ளது.

News November 13, 2025

ஹீரோ லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?

image

இயக்கத்திற்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு, ஹீரோவாக களமிறங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், அறிமுகமாகும் முதல் படத்திலேயே முன்னணி ஹீரோக்களுக்கு நிகராக, ₹35 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘DC’ படத்தில் கதை, திரைக்கதை, வசனத்திலும் லோகேஷின் பங்களிப்பு உள்ளதால் சன் பிக்சர்ஸ் இந்த தொகையை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!