News March 21, 2024

குரூப்- 2 பதவிக்கு நேர்முக தேர்வு

image

குரூப்-2 பதவியில் 29 காலி பணியிடங்களை நிரப்ப 3ம் கட்ட நேர்முக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதான தேர்வில் தேர்ச்சியடைந்து தரவரிசையில் முன்னிலை பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி பணி ஒதுக்கீடு முடிந்து வருகிறது. இதில் காலியாக உள்ள 29 பணியிடங்களுக்கு இன்று 3ம் கட்ட நேர்முக தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இப்பணியில் சேர விரும்புவோர் விவரங்களை பதிவு செய்ய 3 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

Similar News

News November 25, 2025

புதுகையில் 21 பேர் மீது வழக்கு பதிவு!

image

கூழையன்காட்டில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் உள்ள 2 கிணறுகளில் குப்பை கழிவுகளை ஆலங்குடி பேரூராட்சி ஒப்பந்ததாரர் கொட்டினார். இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து விட்டதாக கிராம மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதால் ஆலங்குடி போலீசார் புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சுந்தரமூர்த்தி உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 25, 2025

திமுக ஒரு மதவாத கட்சி: ஜெயபிரகாஷ்

image

திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியின் தோல்வியை மறைக்கவே, உதயநிதி சமஸ்கிருதத்தை பற்றி பேசுகிறார் என பாஜக மாநில துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். திமுக தற்போது வகுப்புவாத கட்சியாக மாறிவிட்டது என்று விமர்சித்த அவர், திமுக ஆட்சியில் CM முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் இந்துக்களை மிகவும் மோசமாக தரம்தாழ்த்தி பேசுகின்றனர் என்றும் சாடியுள்ளார்.

News November 25, 2025

தமிழகத்தில் தற்கொலை எண்ணத்தில் 4 ஆயிரம் பேர்

image

2022 முதல் ‘நட்புடன் உங்களோடு’ என்ற மனநல சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ‘14416’ என்ற ஹெல்ப்லைன் மூலம், நடப்பு ஆண்டில் இதுவரை தற்கொலை எண்ணங்களுக்கு தீர்வு காண 4 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளதாம். குடும்ப சண்டை, கடன் தொல்லை போன்றவை இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. குறிப்பாக, பெண்களை விட ஆண்களே அதிகமாக ஆலோசனை பெற்றுள்ளனராம். எதற்கும் தற்கொலை தீர்வல்ல நண்பர்களே..

error: Content is protected !!