News March 12, 2025
இன்டர்நெட் பயனாளர்கள் 80 கோடியாக அதிகரிப்பு

இந்தியாவில் 80 கோடி பேர் இணையதள வசதியை பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2025 ஜனவரி நிலவரப்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகை 140 கோடி என்றும், அவர்களில் 53 கோடி பேர் வாட்ஸ்அப், 49 கோடி பேர் யூடியூப், 41 கோடி பேர் இன்ஸ்டாகிராம், 38 கோடி பேர் பேஸ்புக், 24 கோடி பேர் X ஆகிய தளங்களை பயன்படுத்துகின்றனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நீங்கள் எதை அதிகம் பயன்படுத்துவீர்கள்?
Similar News
News July 10, 2025
டீசரும் கிடையாது, டிரெய்லரும் கிடையாது.. கூலி புரமோஷன்?

கூலி படத்தில் இருந்து ‘Monica’ என்ற 2-வது பாடல் இன்று மாலை வெளியாகிறது. ஆக.14-ல் படமும் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் டீசர், டிரெய்லர் ஏதும் வெளியிடாமல், புதுவித புரோமோஷன் செய்யும் பணிகளில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், இம்மாத இறுதியில் படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெறவுள்ளது. லோகேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
News July 10, 2025
தமிழகத்தில் 1,996 ஆசிரியர் பணியிடங்கள்: TRB

முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 & கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 1,996 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு செப்.28 முதல் நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.12. மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News July 10, 2025
மகளிர் உரிமைத் தொகை… மக்களுக்கு அதிர்ச்சித் தகவல்

மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் ஜூலை 15-ல் தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க குடும்பத் தலைவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய அரசு ₹7 கோடி மட்டுமே கூடுதலாக ஒதுக்கியுள்ளதாகவும், புதிதாக 5,833 பேருக்கு மட்டுமே ₹1,000 கொடுக்க முடியும் என்றும் <<17013157>>அன்புமணி<<>> குண்டை தூக்கி போட்டுள்ளார். புதிய பயனர்களுக்கு பணம் கிடைக்க தாமதமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.