News October 19, 2025
International Roundup: காஸாவில் 11 பேரை கொன்ற இஸ்ரேல்

*டிரம்ப்பின் குடியுரிமை, பாதுகாப்பு கொள்கைகளை எதிர்த்து பல நாடுகளில் போராட்டம். *பிரிட்டன் இளவரசர் பிரின்ஸ் தனது பட்டத்தை துறந்தார். *பாகிஸ்தான் – ஆப்கன் இடையே கத்தாரில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை. *காஸாவில் 11 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்றது. *இயற்பியல் பரிசு பெற்ற சீன விஞ்ஞானி சென் நிங் யாங் காலமானார். *ஸ்வீடனில் சர்வதேச யூத திரைப்பட விழா திரையிட யாரும் முன்வராததால் ரத்து.
Similar News
News October 19, 2025
GST 2.0: கல்லா கட்டிய கார், பைக் நிறுவனங்கள்

ஜிஎஸ்டி மறுசீரமைப்பின் எதிரொலியாக, பண்டிகை காலத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உச்சபட்ச விற்பனையை பதிவு செய்துள்ளன. நவராத்திரியின் 8 நாள்களில் மாருதி சுசூகி 1.65 கார்களையும், டாடா மோட்டர்ஸ் 50,000 கார்களையும் விற்பனை செய்துள்ளன. அதேபோல் மஹிந்திரா 60%, ஹுண்டாய் 72% அதிக விற்பனையை பதிவு செய்துள்ளன. மேலும் ஹீரோ, பஜாஜ் போன்ற டூவீலர் நிறுவனங்கள் 2 மடங்கு லாபத்தை ஈட்டியுள்ளன.
News October 19, 2025
மீனவர்கள் பிரச்னை பேசி தீர்க்கப்படும்: இலங்கை PM

இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்திற்கு இலங்கை துறைமுகங்கள் எப்போதும் சாதகமான நுழைவு வாயிலாக இருக்கும் என இலங்கை PM ஹரினி அமரசூரியா தெரிவித்துள்ளார். மீனவர்கள் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நட்பு, அணுகுமுறையின் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
IND Vs ENG: அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி, இன்றைய போட்டியில் வென்றால், அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாக அமையும். ஒருவேளை தோற்றால், நியூசிலாந்து உடனான அடுத்த போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய சூழல் ஏற்படும். அதேபோல், இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வென்றால், அரையிறுதிக்கு தகுதி பெறும்.