News March 17, 2024
சர்வதேச பாராகிளைடிங் போட்டி நிறைவு

கேரளாவில் நடைபெற்ற சர்வதேச பாராகிளைடிங் போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது. இடுக்கி மாவட்டத்தில் மார்ச் 14ஆம் தேதி தொடங்கிய போட்டி, இந்திய பாராகிளைடிங் சங்கத்தின் தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்படுகிறது. இதில், இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்பட பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்தனர். இந்தப் போட்டிகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
Similar News
News July 5, 2025
இரவு இங்கெல்லாம் மழை பெய்யும்: IMD

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், நீலகிரி, தென்காசி, தேனி, புதுக்கோட்டை, தஞ்சை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாம். நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடுமாம். உங்க ஊர் நிலவரம் எப்படி இருக்கு?
News July 5, 2025
தவெக ஆலோசகர் பொறுப்பில் இருந்து PK விலகல்

விஜய்யின் தவெகவிற்கான அரசியல் ஆலோசனைக் குழுவில் இருந்து பிரசாந்த் கிஷோர் (PK) தற்காலிகமாக விலகியுள்ளார். பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் அங்கு தனது (ஜன் சுராஜ்) கட்சியை வலுப்படுத்த கவனம் செலுத்துவதால் விலகியுள்ளார். நவம்பர் மாதத்திற்கு பிறகு மீண்டும் தவெகவுக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் குழுவில் இடம் பெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News July 5, 2025
TVK கோரிக்கை ஏற்க HC மறுப்பு..!

இளைஞர் அஜித்குமார் உயிரிழப்பை கண்டித்து தவெக சார்பில் ஜுலை 3யில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் காவல்துறையினர் அனுமதி அளிக்காததால் 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக் கோரி HC-யை நாடியது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் ஆர்ப்பாட்டம் நடத்த 15 நாள்களுக்கு முன்பே போலீசாரிடம் மனு வழங்க வேண்டும் என்றனர். இதனால் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்குமாறு மனு வழங்கப்பட்டுள்ளது.