News March 16, 2024

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு

image

பழநி கோயில் சார்பில் நடத்தப்படவுள்ள ‘அனைத்துலக முத்தமிழ் முருகன்’ மாநாட்டுக்கு சேகர் பாபு தலைமையில் குழு உருவாக்கப்பட்டுள்ளது. முருகனின் பெருமையை உலகிலுள்ள பக்தர்கள் அறியும் வகையில், அறநிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு நடக்கும் மாநாட்டில் ஆன்மிக பெரியோர்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள 20 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 23, 2025

தவெக தொண்டர்கள் 3 பேர் மரணம்.. விஜய் இரங்கல்

image

மதுரை மாநாட்டிற்கு சென்றபோது உயிரிழந்த அக்கட்சியின் தொண்டர்கள் 3 பேரின் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில், ஊரப்பாக்கத்தை சேர்ந்த பிரபாகரன், நீலகிரியை சேர்ந்த ரித்திக் ரோஷன், விருதுநகரை சேர்ந்த காளிராஜ் ஆகியோரின் மறைவு மன வேதனை அளிப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும், அவர்கள் விரும்பிய இலட்சிய சமுதாயத்தை நாம் படைத்து காட்டுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News August 23, 2025

காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி?

image

வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பட்டியலை காங்., தீவிரமாக எடுத்து வருகிறதாம். அதன் பின்னணியில் TVK கூட்டணியில் 70 தொகுதிகள், DCM பதவி ஆஃபர் இருப்பதாக கூறப்படுகிறது. 1989-ல் தனித்து போட்டியிட்டு 26 தொகுதிகளில் வென்ற காங்., அந்த தொகுதிகளையும், 2-வது இடம் வந்த தொகுதிகளையும் கேட்க உள்ளதாம். DMK கூட்டணியில் உள்ள காங்., தலைவர்கள் அண்மை காலமாக ஆட்சியில் பங்கு கோரிக்கையை தீவிரமாக பேசி வருவது கவனிக்கத்தக்கது.

News August 23, 2025

இலங்கை முன்னாள் அதிபர் ஹாஸ்பிடலில் அட்மிட்

image

முன்னாள் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு நிதியை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திய வழக்கில் ரணில் நேற்று கைது செய்யப்பட்டார். ஆக.26 வரை ரிமாண்டில் வைக்கப்பட்ட நிலையில், அவருக்கு BP, சர்க்கரை அதிகரித்து திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்போது கொழும்பில் உள்ள நேஷனல் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!