News June 27, 2024
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்

ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மின்வாகன உற்பத்தியில் ஓசூர் வளர்ந்து வருவதன் காரணமாக அங்கு பன்னாட்டு விமான நிலையம் அமைக்க உள்ளதாக கூறிய அவர், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் அந்த விமான நிலையம் அமையும் என்றும், தெரிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
திருப்பரங்குன்றத்தில் இன்று தீபம் ஏற்றப்படுமா?

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்று இரவு 10:30-க்குள் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் 2-வது முறையாக போலீசார் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி அளிக்கவில்லை. அரசு தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் அனுமதிக்க முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். மலைக்கு செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பதற்றம் நீடிக்கிறது.
News December 4, 2025
குழப்பத்துக்கு காரணம் DMK கைக்கூலிகள்: அன்புமணி

பாமகவில் இப்போது எந்த குழப்பமும் இல்லை என அன்புமணி தெரிவித்துள்ளார். திமுகவின் கைக்கூலிகள் பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும், அது முற்றிலுமாக முறியடிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இன்னும் ஒருசில வாரங்களில் தமிழகத்தில் மெகா கூட்டணி அமையும் என்றும் அதில் பாஜக இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
News December 4, 2025
டெங்கு அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

டெங்கு காய்ச்சல் என்பதற்கான சில அறிகுறிகள் உள்ளன. இவற்றை தெரிந்துகொள்வதால் நாம் எச்சரிக்கையாக இருக்க முடியும். அறிகுறிகள்: திடீரென அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி, பசியின்மை, மிகுந்த சோர்வு ஆகியவை. இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். சாதாரண காய்ச்சல் என்று இருந்துவிட வேண்டாம். SHARE பண்ணுங்க.


