News June 27, 2024
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்

ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மின்வாகன உற்பத்தியில் ஓசூர் வளர்ந்து வருவதன் காரணமாக அங்கு பன்னாட்டு விமான நிலையம் அமைக்க உள்ளதாக கூறிய அவர், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் அந்த விமான நிலையம் அமையும் என்றும், தெரிவித்துள்ளார்.
Similar News
News December 13, 2025
BREAKING: மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. குறிப்பாக, டெல்டா, தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வரும் நாள்களில் அதிகாலையில் பனியின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் IMD தெரிவித்துள்ளது. அதனால், கவனமாக இருங்கள் நண்பர்களே!
News December 13, 2025
நடிச்சா கண்டிப்பா சொல்றேன்.. சந்தானம்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் ‘ஜெயிலர் 2′ படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிறது. ஆனால், அதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. சந்தானமும் அமைதியாகவே இருக்கிறார். இந்த நிலையில்தான், அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். அது என்ன கள்ளக்காதலா? மறைத்து செய்ய, படம் தானே, சொல்லிட்டுதான் செய்வேன்’ என பதிலளித்தார்.
News December 13, 2025
ஒரிஜினல் மிளகு Vs பப்பாளி விதை: எப்படி கண்டுபிடிப்பது?

நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த பொருள் மிளகு. இதில், பப்பாளி விதைகளை சேர்த்து கலப்படம் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரிஜினல் மிளகை கண்டுபிடிப்பது எப்படி? *ஒரு கிளாஸ் தண்ணீரில் மிளகை போட்டால், கலப்படமில்லாத மிளகு தண்ணீரில் மூழ்கிவிடும், பப்பாளி விதைகள் எனில் அவை மிதக்கும் *பப்பாளி விதையில் ஒருவித கசப்பு வாசனை வரும், ஆனால் மிளகுக்கு தனித்துவமான கார வாசனை உண்டு.


