News August 11, 2024
அதிமுகவில் மீண்டும் உட்கட்சித் தேர்தல்?

அதிமுக நிர்வாகிகளாக தற்போது இருக்கும் பெரும்பாலானோர் ஓபிஎஸ், இபிஎஸ் இரட்டைத் தலைமையில் நியமிக்கப்பட்டவர்கள். அதில் தென்மாவட்ட ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் பலர் மக்களவைத் தேர்தலில் வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்களை வைத்துக் கொண்டு 2027 தேர்தலை சந்திக்க முடியாது என்பதால், உட்கட்சித் தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய இபிஎஸ் திட்டமிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
Similar News
News March 4, 2026
சர்ச்சை விவகாரம்.. முதல் முறையாக விஜய் பேசினார்

தஞ்சை தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் ‘ஜன நாயகன்’ பட சென்சார் சர்ச்சை குறித்து முதல்முறையாக விஜய் மௌனம் கலைத்துள்ளார். கரூர் விவகாரம் முதல் ஜன நாயகன்’ வரை தன்மீது பழி மேல் பழி போடப்படுவதாக விஜய் தெரிவித்துள்ளார். மேலும், ‘ஜன நாயகன்’ ரிலீஸ் பிரச்னையில் தனக்காக ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கும், முக்கியமாக பூசி மெழுகி குரல் கொடுத்த CM ஸ்டாலினுக்கும் நன்றி எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 4, 2026
9 லட்சம் கோடி ரூபாய் சரிந்தது.. அச்சச்சோ

மத்திய கிழக்கிலுள்ள போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் <<19293844>>பங்குச்சந்தை<<>> கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்று ஒருநாள் மட்டும் முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட ₹9.5 லட்சம் கோடியை இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. டாடா ஸ்டீல், Ultratech, இண்டிகோ போன்ற நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதே நேரத்தில், பாதுகாப்பு துறை பங்குகள் மட்டும் 5% – 13% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 4, 2026
கடிதம் எழுதிவிட்டு தூங்க சென்றுவிடுவார் CM: விஜய்

மீனவர்கள் கைது செய்யப்பட்டால் PM-க்கு கடிதம் கொடுத்துவிட்டு மீண்டும் தூங்கச் சென்றுவிடுவார் ஸ்டாலின் என விஜய் கிண்டலடித்துள்ளார். மீனவர்கள் விவகாரத்தில் மானே, தேனே, பொன்மானே என கடிதம் எழுதாமல் உணர்வுப்பூர்வமான நடவடிக்கை தேவை என்ற அவர், தான் ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் மீது கைவைக்கவே முடியாது எனவும் உறுதியளித்துள்ளார். மேலும், திமுகவை மக்கள் வெறுத்துவிட்டதாகவும் கூறினார்.


