News May 18, 2024
கலை, அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வம்

தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இணைந்து படிப்பதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விண்ணப்பப் பதிவு தொடங்கிய 12 நாட்களில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் 20ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News March 7, 2026
சைபர் மோசடியில் பணத்தை இழந்தால் இழப்பீடு

சைபர் மோசடியில் ₹50,000-க்கும் குறைவான தொகையை இழந்திருந்தால், ₹25000 வரை இழப்பீடு வழங்க RBI ஆலோசித்து வருகிறது. பணத்தை இழந்த 5 நாள்களுக்குள் புகார் அளிக்கப்பட்டால், எந்த கேள்வியும் கேட்காமல் இந்த தொகை வழங்கப்படும். இந்த திட்டம் குறித்து ஏப்ரல் 6 வரை வங்கிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். இது நடைமுறைக்கு சாத்தியமாக இருந்தால், ஜூலை 1 முதல் இத்திட்டம் அமலுக்கு வரும்.
News March 7, 2026
புதுச்சேரியில் கம்யூனிஸ்ட் தனித்து போட்டி.. திமுக ஷாக்!

புதுச்சேரியில் 2 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது. TN-ல் நீண்ட இழுபறிக்கு பிறகு ஒருவழியாக கூட்டணி இறுதி வடிவம் பெற்றுள்ளது. ஆனாலும், புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மோதல் போக்கு நீடிக்கிறது. இதனால், லாஸ்பேட்டை மற்றும் திருபுவனை தொகுதியில் தனித்து களம் காண்பதாக CPM அறிவித்துள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?
News March 7, 2026
இந்தியாவை போட்டியாளராக மாற விடமாட்டோம்: அமெரிக்கா

சீனாவை போல இந்தியாவை எங்களது போட்டியாளராக மாற விடமாட்டோம் என டெல்லியில் நடந்த மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுக்கு சந்தையை திறந்து விட்டது மிகப்பெரிய தவறு; அதை நாங்கள் மீண்டும் செய்ய மாட்டோம் என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் செய்யும் எந்த ஒரு ஒப்பந்தமும் அமெரிக்க மக்களின் நலனுக்கானது எனவும் கூறியுள்ளார்.


