News April 7, 2024
விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன்

I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் நாட்டை காக்க உள்ள கதாநாயகன் என்று கூறினார். மக்கள் முன்னேற்றத்திற்காக திமுக, காங்கிரஸ் பாடுபடுவதாக கூறிய அவர், மதத்தின் பெயரால் பிரதமர் மோடி பிரசாரம் செய்வதாக சாடினார்.
Similar News
News January 19, 2026
உங்கள் தலையில் ₹1.94 லட்சம் கடன் சுமை

தேர்தலுக்காக பல இலவசங்கள் அடங்கிய வாக்குறுதிகளை அறிவிக்க DMK, ADMK கட்சிகள் தயாராகிவிட்டன. இதனிடையே, TN-ன் கடன் ₹9.29 லட்சம் கோடி என்றும், ஒவ்வொருவர் மீதும் தலா ₹1.94 லட்சம் கடன் சுமை உள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. 2016-21 ADMK ஆட்சியில் ₹4.80 லட்சம் கோடியாக இருந்த கடன், 4½ ஆண்டு DMK ஆட்சியில் ₹9.21 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. எனவே கவர்ச்சி அறிவிப்புகள் தேவையா என சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.
News January 19, 2026
பீர் குடித்த இளைஞர்கள் மரணம்!

ஆந்திராவில் போட்டி போட்டுக்கொண்டு 19 பாட்டில் பீர் குடித்த 2 மென் பொறியாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராந்தியையொட்டி சித்தூரை சேர்ந்த 6 இளைஞர்கள் மது அருந்தி கொண்டாடியுள்ளனர். இதில் மணிகுமார்(34), புஷ்பராஜ்(26) இருவரும் 19 பாட்டில் பீர் குடித்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
News January 19, 2026
சபரிமலை நெய் மோசடி.. 33 பேர் மீது வழக்கு

சபரிமலையில் ஏற்கெனவே தங்கம் திருடப்பட்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது நெய் மோசடி அம்பலமாகியுள்ளது. போலியான அபிஷேக நெய் பிரசாத பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ₹36.24 லட்சம் மோசடி நடந்தது கண்டறியப்பட்ட நிலையில், தொடர்புடைய 33 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.


