News March 17, 2024
எல்லையில் தீவிரம்: கலெக்டர் அறிவிப்பு

நீலகிரி கலெக்டர் அருணா நேற்று (மார்ச்.16) கூறுகையில், தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப் பட்டு உள்ளது. மேலும், தேர்தல் குறித்த புகார்களை 1800-425-2782, கட்டுப்பாட்டு அறை எண்கள்: 0423-2957101, 2957102, 2957103, 2957104 ஆகிய எண்களை அனுகலாம் என தெரிவித்தார்.
Similar News
News November 22, 2025
நீலகிரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

நீலகிரி மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நீலகிரி மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News November 22, 2025
நீலகிரி: பெண் போலீசுக்கு ஆபாச வீடியோ.. ஒருவர் கைது!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன் (45). இவர் நீலகிரி எஸ்பி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரின் செல்போனை எண்ணை குறித்துக்கொண்டு முருகன், வாட்ஸ்-அப்புக்கு ஆபாச புகைப்படம், வீடியோக்களை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இன்ஸ்பெக்டர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஊட்டி ஊரக போலீசார் விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.
News November 22, 2025
நீலகிரி: இன்று ஒருநாள் தடை அறிவிப்பு!

நீலகிரி, குன்னுார் சிம்ஸ் பார்க் பகுதியில் இருந்து ஜிம்கானா வரையிலான ஆரஞ்ச் குரோவ் சாலை, மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 நாட்களாக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அரசு டவுன் பஸ்கள், ராணுவ வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும், 22-ம் தேதி (இன்று) ஒரு நாள் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.


