News March 17, 2024
எல்லையில் தீவிரம்: கலெக்டர் அறிவிப்பு

நீலகிரி கலெக்டர் அருணா நேற்று (மார்ச்.16) கூறுகையில், தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப் பட்டு உள்ளது. மேலும், தேர்தல் குறித்த புகார்களை 1800-425-2782, கட்டுப்பாட்டு அறை எண்கள்: 0423-2957101, 2957102, 2957103, 2957104 ஆகிய எண்களை அனுகலாம் என தெரிவித்தார்.
Similar News
News September 18, 2025
நீலகிரி: ஓவியத்தை கண்டு பயந்த காட்டு யானை!

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள மசினகுடி வனத்துறை சோதனைச் சாவடி அருகே சாலையை கடந்த காட்டு யானை ஒன்று சுவரில் வரையப்பட்டிருந்த யானை ஓவியத்தைப் பார்த்து, நிஜ யானை என அதிர்ச்சி அடைந்தது. முதலில் பயந்து நின்ற அந்த காட்டு யானை, அச்சத்துடன் அந்த யானை பார்த்து அச்சத்துடனே நின்றது. இக்காட்சியை அப்பகுதி வழியே சென்ற சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்தனர். இந்த காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
News September 18, 2025
நீலகிரி: வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே படைச்சேரி பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு இருந்தது. இந்த யானை, தேவதாஸ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் அருகே, காபி மரங்களை சேதப்படுத்தியது. அப்போது, பாக்கு மரம் வீட்டு கூரை மீது விழுந்ததில் சேதம் ஏற்பட்டது. வீட்டினுள் அறையில் யாரும் இல்லாததால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை. தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சகர் அய்யனார் நேரில் ஆய்வு செய்தார்.
News September 18, 2025
நீலகிரியில் காட்டு யானை அட்டகாசம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட நியூ ஹோப் கிளை நூலகத்தை இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று நூலகத்தின் கதவை சேதப்படுத்தி உள்ளது. உணவு தேடி வந்த யானை கதவை சேதப்படுத்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நூலகத்தின் கதவை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் யானை உணவு தேடி வரலாம் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.