News June 13, 2024
ஜெயக்குமார் மரண வழக்கில் தீவிரமெடுக்கும் விசாரணை

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் விசாரணை தீவிரமெடுத்துள்ளது. ஏற்கெனவே, சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி நெல்லையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், ஐஜி அன்பு ஆகியோர் வழக்கு தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்த இன்று நெல்லை செல்கின்றனர். தொடர்ந்து, உடல் கண்டெடுக்கப்பட்ட தோட்டத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Similar News
News November 12, 2025
அமெரிக்காவால் இந்தியாவுக்கு ‘ஜாக்பாட்’

H-1B விசா கட்டண உயர்வு, குடியேற்ற விதிகள் கடுமையாக்கம் உள்ளிட்டவற்றால் அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு படையெடுத்து வருகின்றன. Wall Street, ஜேபி மார்கன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது நிதி மற்றும் தொழில்நுட்ப பணிகளை, பெங்களூரு, ஹைதராபாத், குருகிராம், மும்பை ஆகிய நகரங்களுக்கு மாற்றி வருகின்றன. இதனால், இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 12, 2025
சஞ்சுவை வாங்க இதுதான் காரணமா?

ஜடேஜாவை கொடுத்தாவது சஞ்சுவை வாங்க, CSK முயற்சி எடுப்பதில் முக்கிய காரணம் ஒன்றும் ஒளிந்திருப்பதாக பேசப்படுகிறது. தோனிக்கு அடுத்து சரியான கேப்டனை நியமிக்க முடியாமல் CSK திணறுகிறது. ஜடேஜா, ருதுராஜ்
ஆகியோர் கேப்டனாக சோபிக்காத நிலையில், தற்போது சஞ்சுவை CSK நிர்வாகம் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காகவே, ஜடேஜாவையும் கொடுக்க முன்வருவதாக கூறப்படுகிறது. இது சரியான முடிவு என நினைக்கிறீங்களா?
News November 12, 2025
வேலை இல்லையா? அரசு திட்டம் உதவும்!

கிராமப்புறங்களில் இளைஞர்கள் சுயதொழில் தொடங்க, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் தொழிற் பயிற்சிகளை வழங்குகிறது. இதில் சேர குறைந்தது 8-வது படித்திருக்க வேண்டும். பயிற்சியின் போது காலை & மாலையில் உணவு, தேநீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியை முடிப்பவர்களுக்கு தொழில் தொடங்க வங்கியில் இருந்து கடனும் பெற்றுத்தரப்படும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை அணுகுங்கள். SHARE.


