News August 3, 2024

காப்பீடு ப்ரீமியத்துக்கு ஜிஎஸ்டியில் விலக்கு: மம்தா

image

காப்பீடு ப்ரீமியத்துக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க GST குழுத்தலைவரும், நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமனுக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், காப்பீடு பிரீமியம் மீது வரி விதிப்பது, மக்கள் விரோத செயல் என்றும், சாமானிய மக்களின் நிதிச்சுமையை அதிகரிக்கும் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆயுள், மருத்துவ காப்பீடு பிரீமியம் மீது 18% GST வரி விதிக்கப்படுகிறது.

Similar News

News November 17, 2025

தேஜஸ்வியின் அறிவு மங்கிப்போனது: தேஜ் பிரதாப்

image

தனது சகோதரி ரோஹிணியை இழிவுபடுத்தியதை ஏற்க முடியாது என லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் குரல் எழுப்பியுள்ளார். தனக்கு நடந்ததை கூட பொறுத்துக்கொள்வேன் என கூறிய அவர், தனது சகோதரிக்கு நடந்ததை எந்தவொரு சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரோஹிணியை நோக்கி <<18303650>>செருப்பை<<>> காட்டியது தனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியதாகவும், தேஜஸ்வியின் அறிவு மங்கிப்போய்விட்டது எனவும் சாடியுள்ளார்.

News November 17, 2025

PTR-ஐ எதிர்த்து போட்டியிடுகிறாரா பிரேமலதா?

image

யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல் தேதிமுக சஸ்பென்ஸாக வைத்து இருக்கிறது. இந்த நிலையில், அமைச்சர் PTR-ன் மதுரை மத்திய தொகுதியில் பிரேமலதா போட்டியிட வேண்டும் என்று மதுரை தேமுதிக பூத் முகவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை விஜயகாந்தின் சொந்த ஊர்; இதனால், அங்கு பிரேமலதா களமிறங்கினால் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News November 17, 2025

சியா விதைகளை இப்படி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!

image

சியா விதைகளை ஊற வைக்காமல் அப்படியே வாயில் போட்டுவிட்டு, பிறகு தண்ணீர் அருந்தக்கூடாது. இப்படி செய்வதால், அந்த விதைகள் உங்கள் தொண்டையில் சிக்கி மூச்சடைப்பை ஏற்படுத்தும். பிறகு குடல்களில் அடைப்பை ஏற்படுத்தி பல வயிற்றுப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே, சியா விதைகளை தண்ணீரில் அரை மணி நேரமாவது ஊறவைத்து சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். விழிப்புணர்வுக்காக SHARE THIS.

error: Content is protected !!