News January 17, 2025

கும்பமேளாவுக்கு செல்வோருக்கு காப்பீடு திட்டம்

image

மகா கும்பமேளாவுக்கு செல்வோருக்காக போன்பே, ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனங்கள் பிரத்யேக காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. பேருந்து, ரயிலில் செல்வோருக்கான பிரீமியம் ₹59, விமானத்தில் செல்வோருக்கான பிரீமியம் ₹99 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணத் தேதிகளில் ₹50,000 மருத்துவக் காப்பீடு, ₹1 லட்சம் ஆயுள் காப்பீடு கிடைக்கும். விமானத்தில் பயணிக்கும்போது உடைமைகளை தவறவிட்டால் ₹5,000 வழங்கப்படும்.

Similar News

News August 24, 2025

உடனடியாக ₹5 லட்சம் கடன்.. தமிழக அரசு அறிவிப்பு

image

விவசாயிகள் விண்ணப்பித்த ஒரே நாளில் ₹5 லட்சம் வரை பயிர்க்கடன் வழங்கப்படுவதாக TN அரசு தெரிவித்துள்ளது. நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகியவற்றை பயிரிட இந்த கடன்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் ₹17,000 கோடி பயிர்க்கடனும், ₹3,000 கோடி கால்நடை வளர்ப்புக் கடனும் வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. SHARE IT.

News August 24, 2025

இது வெட்கக்கேடு: திமுக அரசுக்கு சீமான் கேள்வி

image

தூய்மைப் பணியின் போது உயிரிழந்த வரலட்சுமி குடும்பத்துக்கு ₹1 கோடி நிதி வழங்க வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி சீமான் வெளியிட்ட அறிக்கையில், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவல நிலை தற்போதும் தொடர்வதாகவும், அதில் ஆதித்தொல்குடி மக்களே ஈடுபடுத்தப்படுவதும் வெட்கக்கேடானது இல்லையா? இதுதான் குலத்தொழிலுக்கு எதிரான திமுக அரசின் முற்போக்கு செயல்பாடா? என கேட்டுள்ளார்.

News August 24, 2025

10% வாக்குறுதிகள் கூட நிறைவேற்றவில்லை: இபிஎஸ்

image

திமுக ஆட்சி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் இபிஎஸ் சாடினார். திருவெறும்பூரில் பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 10% கூட திமுக நிறைவேற்றவில்லை என்றும், ஆனால் 98% வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக திமுக கூறுவது பொய் என்றார். மேலும், தேர்தலை கணக்கிட்டே 30 லட்சம் மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்குவதாக திமுக அரசு அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

error: Content is protected !!